டிரம்ப் அமெரிக்க அதிபர் மட்டும் தான்.. ஆனால் மோடி உலக தலைவர்.. சில நிமிடங்களில் ட்வீட்டை டெலிட் செய்த கங்கனா..!

  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடாது என எச்சரித்ததற்கு பதிலாக, பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத், “மோடி தான் ட்ரம்ப்-ஐ விட…

kangana

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடாது என எச்சரித்ததற்கு பதிலாக, பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத், “மோடி தான் ட்ரம்ப்-ஐ விட மேலானவர்” எனச் சாடி விமர்சித்தார்.

மாண்டி தொகுதியை சேர்ந்த பாஜக எம்.பி. கங்கனா, தனது சமூக ஊடகக் கருத்தில் “இது ட்ரம்ப் என்பவரின் தனிப்பட்ட பொறாமையா? அல்லது தூய அரசியலில் அதிருப்தியா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அவர் தனது X பக்கத்தில் இரண்டு தலைவர்களையும் மூன்று அம்சங்களில் ஒப்பிட்டார்:

“அவர் அமெரிக்க அதிபர், ஆனாலும் உலகம் காதலிக்கும் தலைவர் இந்திய பிரதமர் தான்”

“ட்ரம்ப் இரண்டாவது முறை அதிபராகிறார், நம் பிரதமர் மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்”

“மறுக்க முடியாமல், ட்ரம்ப் ஒரு ஆல்பா மேல் தானே, ஆனா நம்மோட PM சார் எல்லா ஆல்பா மேல்களுக்கும் ‘பாப்’”

“இதுதான் உங்கள் கருத்து? இது தனிப்பட்ட பொறாமையா? அரசியல் பாதுகாப்பு பற்றிய பதற்றமா?” எனத் தனதுடைய பின்தொடர்வோர்களிடம் கேட்டார்.

அதனைத் தொடர்ந்து, கங்கனா ரனாவத் தன் பதிவை நீக்கியதாகவும், “இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் கூறினார். அவர் மேலும், “பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவர்கள் என்னை அழைத்து கூறியதற்கேற்ப, நான் என் ட்வீட்டை உடனே நீக்கியுள்ளேன். இன்ஸ்டாகிராமிலிருந்தும் அழித்துவிட்டேன்” என கூறினார்.

கங்கனா ரனாவத் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது இது முதல்முறையல்ல. 2024-ஆம் ஆண்டு, ஹரியானா மாநில தேர்தலுக்கிடையில், 2020–21 விவசாயிகளின் போராட்டம் பற்றி, “அப்போது உடல்கள் தொங்கிக் கொண்டிருந்தன, பாலியல் வன்கொடுமைகள் நடந்தன, இந்தியாவை பங்களாதேஷாக மாற்றவே திட்டமிடப்பட்டது” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அந்த நேரத்தில் பாஜக தனது தனி அறிக்கையில், “கங்கனாவின் அந்தக் கருத்துகள் கட்சியின் நிலைப்பாடல்ல” என்று விளக்கம் கொடுத்தது.

2024 தேர்தலில், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கங்கனா, தேர்தல் வெற்றிக்குப் பிறகு, சண்டிகர் விமான நிலையத்தில் ஒரு பெண் போலீசாரால் அறைந்ததாகவும், அதற்கு காரணம் விவசாயிகளைக் குறைக்கும் விதமாக பேசியதுதான் என அந்த பெண் போலீசார் கூறியதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.