முடிவுக்கு வந்தது மோதல்.. தாக்குதலை நிறுத்துவதாக இந்தியா அறிவிப்பு.. டிரம்ப் நன்றி..!

  கடந்த சில நாட்களாக இந்தியா–பாகிஸ்தான் போர் ஏற்படும் அபாயம் இருந்த நிலையில், உலக நாடுகள் இந்த போரை நிறுத்த தீவிர பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. அமெரிக்கா வெளியுறவு அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை…

india pak

 

கடந்த சில நாட்களாக இந்தியா–பாகிஸ்தான் போர் ஏற்படும் அபாயம் இருந்த நிலையில், உலக நாடுகள் இந்த போரை நிறுத்த தீவிர பேச்சு வார்த்தை நடத்தி வந்தன.

அமெரிக்கா வெளியுறவு அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, போரை நிறுத்தி அமைதி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் சவூதி அரேபியா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தன.

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், “இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்த தயார்” என்று அறிவித்தார்.

சற்று முன் வெளியான தகவலின் படி, பாகிஸ்தான் மீதான தாக்குதலை இன்று மாலை ஐந்து மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது.

இரு நாடுகளும் இடையே நேரடி பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்துவது என முடிவு செய்துள்ளன.

இதனை அடுத்து, அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தியதாக இந்தியா–பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன. இதனால் போர் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

இந்தியா–பாகிஸ்தான் இடையே அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணி முதல் நிறுத்தம் என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு தாக்குதலை கைவிட்ட இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு எனுடைய வாழ்த்துக்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.