பஹல்காம் போனி அசோசியேஷன் தலைவர் அப்துல் வஹீத் வான், தீவிரவாத தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது என்று தகவல் அனுப்பியவுடன், நாங்கள் அங்குள்ள தாக்குதலால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு உதவ விரைந்தோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் தண்ணீர் வழங்கினோம். நடக்க முடியாதவர்களை தூக்கிச் சென்றோம்.
மனிதநேயமே மதத்தை விட முக்கியமானது. சுற்றுலாப் பயணிகள் எங்கள் விருந்தினர்கள். அவர்களே எங்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படை. அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை. பலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
சுற்றுலாப் பயணிகள் அழுத போது எனக்கும் கண்ணீர் வந்தது. அவர்களது வருகையால் எங்கள் வீடுகளில் விளக்குகள் ஒளிருகின்றன. அவர்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை இல்லை’ என்று உணர்வுடன் கூறினார். அவரது இந்த வீடியோ வைரலானதில் இருந்து பயங்கரவாதத்திற்கு எந்த மதத்தினரும் ஆதரவு கொடுக்கவில்லை என்பதும், இன்னும் மனித நேயம் உலகில் உள்ளது என்பது உறுதி செய்துள்ளதாக கருதப்படுகிறது.