பஹல்காம் தாக்குதலை வைத்து கேவலமான அரசியல் செய்யும் காங்கிரஸ்.. பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல் என விமர்சனம்..!

  26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலால் நாடு முழுவதும் கோபமும் துயரமும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை சர்ச்சையிலும் குழப்பத்திலும் சிக்கி, தேசிய மற்றும் உலகளாவிய…

congress

 

26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட கொடூரமான தாக்குதலால் நாடு முழுவதும் கோபமும் துயரமும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு முறை சர்ச்சையிலும் குழப்பத்திலும் சிக்கி, தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மத்திய அரசுடன் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய இந்த தருணத்தில், காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் குற்றச்சாட்டு பேச்சுகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தங்கள் தலைமையையே அவமானப்படுத்த மட்டுமல்லாமல், பாகிஸ்தான் இந்தியாவை தாக்க பயன்படுத்தக் கூடிய வாய்ப்பையும் வழங்கியுள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர் ஆர்.பி. திம்மப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா உள்ளிட்டவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகள் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த மூத்த அரசியல்வாதிகள், பாகிஸ்தானுடன் போர்செய்வது அவசியமல்ல என்றும், அமைதியை தேட வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் தலைமை நேற்று கட்சியின் நிலைப்பாட்டை மீறி கருத்துக்களை வெளியிடக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயிராம் ரமேஷ், பஹல்காம் பயணிகள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்த காங்கிரஸ் பணிக்குழுவின் தீர்மானத்தை நினைவுபடுத்தும் வகையில், X-இல் ஒரு பதிவு செய்தார். ஆனால், அதிலிருந்து சில மணி நேரங்களிலேயே, காங்கிரசின் உத்தியோகபூர்வ X கணக்கு அந்த உத்தரவை மீறி, பிரதமர் மோடியை நேரடியாக குறிவைக்கும் ‘காயாப்’ (மறைந்துவிட்டார்) என்ற போஸ்டரை வெளியிட்டது.

இந்த போஸ்டர், பிரதமர் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காததை குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால், இதை பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாட் சௌத்ரி பயன்படுத்தி இந்தியாவை தாக்கினார். மேலும், அவர் அந்த பதிவை ‘Naughty Congress’ என்கிற ஹாஷ்டேக்-இல் முடித்திருந்தார்.

காங்கிரசின் இத்தகைய சமூக ஊடக நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து, பாஜக கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் அதற்கு ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் பரவாயில்லை. பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியா தலை குனியாது, உடையாது, பின்னடையாது. பயங்கரவாதிகளுக்கு  பிரியாணி கொடுக்க மாட்டோம், துப்பாக்கி தான்’ என பதிவு செய்துள்ளது.

பாஜக தலைவர் அமித் மால்வியா, பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தாரும் எதிர்கொள்ளும் துயரத்தை புறக்கணித்து வரும் காங்கிரஸ் கட்சி ‘பாகிஸ்தானின் ஸ்லீப்பர் செல்கள்’ என கடுமையாக விமர்சித்தார். இவர்களின் பொறுப்பற்ற மற்றும் அசிங்கமான கூற்றுகளை பாருங்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மரியாதையே வழங்க மறுக்கின்றனர். சரிவிகிதமான ஆதாரங்களும், நேரடி சாட்சிகளும் இருந்தும், ஒட்டகத்தின் போல், காங்கிரஸ் தன் தலையை மணலில் புதைத்து விட்டது,’ என அவர் X-இல் பதிவிட்டார்.

மற்றொரு பதிவில், பாஜக ஐ.டி. செல் தலைவர் ராகுல் காந்தியைக் குறிவைத்து, அவர் தொடர்ந்து பிரதமரை எதிர்த்து வன்முறையை தூண்டுவதாகவும் குற்றம்சாட்டினார். ’காங்கிரஸ் போன்ற கட்சிகளின் நோக்கங்களை வெளியே தெரிந்து விட்டது. இது சாதாரண அரசியல் கருத்தல்ல; இது முஸ்லிம் வாக்காளர் தரப்பை ஈர்ப்பதற்கான சைகையாகவும், பிரதமருக்கு எதிரான மறைமுகமான தூண்டுதலாகவும் உள்ளது,’ என அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், காங்கிரஸ் இந்தியாவுடன் நிற்கிறதா அல்லது பாகிஸ்தானுடனா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடவடிக்கையையும் காங்கிரஸ் எதிர்த்ததையையும் நினைவூட்டினார்.

பாஜக பேச்சாளர் ஷெஹ்ஜாத் பூனாவாலா, காங்கிரஸை ‘பி.பி.பி – பாகிஸ்தான் பரஸ்த் பார்ட்டி’ எனக் கடுமையாக விமர்சித்து, 26/11 மும்பை தாக்குதல் மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் எடுத்த நிலைப்பாடு பாகிஸ்தானின் பேச்சை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் காயாப் போஸ்டருக்குப் பதிலளிக்க முயன்ற ஜெயிராம் ரமேஷ், காங்கிரஸின் ஒரே கோரிக்கையே, பஹல்காம் துயர நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பிழைகளை விவாதிக்க, பாராளுமன்றத்தில் சிறப்பு அமர்வு நடத்த வேண்டும் என்பதுதான் என விளக்கம் அளித்தார்.