இன்றைய காலகட்டத்தில் பலர் உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். முறையான வாழ்க்கை முறையையும் பழங்காலத்து சிறுதானிய உணவுகளையும் சாப்பிட தொடங்கி விட்டார்கள். ஆனால் என்னதான் மக்கள் உடல்நலனில் அக்கறை எடுத்து கொண்டாலும் பலராலும் கைவிட முடியாத ஒரு பழக்கம் என்னவென்றால் அது டீ காபி குடிப்பது. இந்த பழக்கத்தை அவ்வளவு எளிதாக யாராலும் விட்டுவிட முடியாது. இதற்கும் ஒரு படி மேலாக போய் ஒரு சிலர் ஒரு நாளில் அதிகப்படியாக டீ காபி குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு நபராக நீங்கள் இருந்தால் உங்கள் உடல் நலனில் இந்த பிரச்சனை வரக்கூடும். அது என்னவென்று இனி காண்போம்.
டீ காபி குடித்தால் தான் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படும் போன்ற உணர்வு நமக்கு எப்போதும் இருப்பது தான். ஆனால் வேலை செய்பவர்கள் அலுவலக டென்ஷனில் இருப்பவர்கள் ஒரு நாளில் நான்கு ஐந்து முறை டீ காபி குடிப்பார்கள். இப்படி தினமும் அதிகப்படியாக டீ காபி குடிக்கும் பழக்கம் நீங்கள் கொண்டிருந்தால் உங்களுக்கு வயிறு சம்பந்தமான IBS எனப்படும் இரிட்டபுள் பவுல் சின்ட்ரோம் போன்ற பிரச்சனை உங்களுக்கு வரலாம் என்று ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த இரைப்பை குடல் கோராறு எனப்படும் இரிட்டபுள் பவுள் சின்ட்றோம் வந்துவிட்டால் உங்களுக்கு வயிறு உப்பசம், வயிறு வலி, வாயு தொல்லை, சாப்பிட்டவுடன் பாத்ரூம் செல்ல வேண்டிய நிலை போன்ற பல உடல் தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அதனால் டீ காபி குடிப்பவர்கள் அளவாக எடுத்துக் கொள்வதே நல்லது.