இயற்கை உணவுகளால் ரத்தத்தை சுத்திகரிக்கணுமா? இதை முதல்ல படிங்க..!

நாம சாப்பிடுற உணவு தான் உடலின் 80 சதவீத நோய்களுக்கும் காரணமாகிறது. குறிப்பாக உப்பு, புளிப்பு அதிகமாக சேர்த்தால் ரத்தம் நச்சாகி விடுகிறது. இது தெரியாமல் வாய்க்கு ருசியாக நாம் என்னென்ன தேவையோ எல்லாவற்றையும்…

blood

நாம சாப்பிடுற உணவு தான் உடலின் 80 சதவீத நோய்களுக்கும் காரணமாகிறது. குறிப்பாக உப்பு, புளிப்பு அதிகமாக சேர்த்தால் ரத்தம் நச்சாகி விடுகிறது. இது தெரியாமல் வாய்க்கு ருசியாக நாம் என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு சாப்பிட்டு விடுகிறோம். பிறகு அவதிப்படுகிறோம். இதற்கு என்னதான் தீர்வு? வாங்க பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவு எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட ஒரு மடங்கு சுத்தமான ரத்தம் முக்கியம். ரத்தத்தில் நச்சு இருந்தால், உடல் சீராக இயங்குவதில் பாதிப்பு ஏற்படும். உடல் ரத்தத்தில் நச்சு தன்மை இருக்கிறது என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால், அதற்கு உடலில் ஏற்படும் பல அறிகுறிகள் உள்ளன.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல், ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும் இடத்தில், ஈரப்பதம் இல்லாத நிலை, ஒற்றை தலைவலி, பேசும்போது கெட்ட வாடை வீசுவது, முடி கொட்டுவது இந்த அறிகுறிகள் இருந்தால், ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம். அதேபோல் ரத்தத்தில் யூரியா அதிகமாக இருந்தால், உடலில் அதிகமான நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.

சிறுநீரக பாதிப்பு: ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும்போது சிறுநீரக பாதிப்பு,ஏற்படும். யூரிக் ஆசிட் அளவு அதிரிக்கும்போது காலில் கட்டை விரலில் ஒருவித வலி ஏற்படும். இதேபோல் சோடியம், பொட்டாசியம், குளோரைட் ஆகியவை அதிகமாகும்போது, உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். தோலில் அதிக பாதிப்புகள் ஏற்படுவதற்கும் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை தான் காரணம்.

இயற்கை முறை: உணவில் அதிகமாக புளி சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்படும். உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டாலும், ரத்தத்தில் நச்சு ஏற்படும். இதை இயற்கையான முறையில், சரி செய்வதற்கும், ரத்தத்தில் நச்சு தன்மையை போக்குவதற்கும் நெல்லிக்காய் பெரிய அளவில் உதவும்.

தினமும் 2 நெல்லிக்காய் இருந்தால், ரத்தத்தில் உள்ள நச்சை எளிதாக சுத்தப்படுத்தலாம். தினமும் 2 நெல்லிக்காய் எடுத்து அதில் வசம்பு சேர்த்து, அதில் இஞ்சி சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் அறைத்து வடிகட்டாமல் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பெரிய நன்மை கிடைக்கும். நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் ஜலதோஷம் வருகிறது என்றால், இதில் கொஞ்சம் மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம். தொடர்ந்து இப்படி குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்த நச்சுக்கள் நீங்கும்.