குளிக்கப் போறீங்களா? அப்படின்னா மறக்காம இந்த முறையில் குளிங்க..!

நாம் தினமும் குளிக்கிறோம். அதை ஏதோ கடமை என்றுதான் செய்கிறோம். சிலர் பேருக்கு குளிப்பார்கள். காக்கா குளியல் மாதிரி ஆற்றில் ஒரு முங்கு போட்டு விட்டு எழுந்து விடுவார்கள். சரியாக அழுக்குக் கூட தேய்த்துக்…

நாம் தினமும் குளிக்கிறோம். அதை ஏதோ கடமை என்றுதான் செய்கிறோம். சிலர் பேருக்கு குளிப்பார்கள். காக்கா குளியல் மாதிரி ஆற்றில் ஒரு முங்கு போட்டு விட்டு எழுந்து விடுவார்கள். சரியாக அழுக்குக் கூட தேய்த்துக் குளிக்க மாட்டார்கள். குளிப்பதே சிலருக்குப் பெரிய வேலையாக இருக்கும்.

அதிலும் டிரஸ் எல்லாம் துவைத்துக் குளிக்க வேண்டுமா என ரொம்பவே அங்கலாய்ப்பர். வசதி படைத்தவர்கள் வாஷிங் மெஷினில் போட்டு விட்டு அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்று விடுவர். சரி. விஷயத்துக்கு வருவோம். குளியல் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதன் நோக்கம் என்னன்னு பார்க்கலாமா…

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை. அழுக்கு போகவா, நிச்சயம் கிடையாது. சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா.? குளியல் என்றால் குளிர்வித்தல் குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பக் கழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிர்ந்த நீரில் குளிக்கிறோம். வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலையில் ஊற்ற வேண்டும்,

எதற்கு இப்படி? காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும். நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.