வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்து தொலைக்காட்சி தொடரில் பணியாற்றி அதற்குப் பிறகு சினிமாவிற்குள் நுழைந்தார் வெற்றிமாறன். 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளை வென்று வெற்றி பெற்றது. அடுத்ததாக விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் ஒன்று இரண்டு போன்ற வெற்றி பழங்களை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். இவரது படங்கள் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று இருக்கும்.
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார் வெற்றிமாறன். தற்போது கவின் நடிக்கும் மாஸ்க் திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிக்கிறார். அடுத்து சிம்புவுடன் இணைந்து படம் பண்ண போகிறார் வெற்றிமாறன். தமிழ் சினிமாவின் பிஸியான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார் வெற்றிமாறன்.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கி நல்ல விமர்சனங்களை பெற்ற வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதைப் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார் வெற்றிமாறன். அவர் கூறியது என்னவென்றால், என்னிடம் வட சென்னை 2 படத்திற்கு வட சென்னை சுற்றியே ஒரு கதைக்களமும் புதிதாக ஒரு கதையும் இருந்தது. இரண்டையும் தனுஷிடம் கூறி எப்படி எடுக்கலாம் நீங்களே முடிவு செய்யுங்கள் என்று கூறினேன். அவர் நீங்கள் எப்படி எடுத்தாலும் பரவாயில்லை உங்களுடைய கம்போர்ட்க்கு தகுந்தப்படி எடுங்கள் என்று எனக்கு ஃபுல் ஃப்ரீடம் கொடுத்து விட்டார் தனுஷ் என்று பகிர்ந்திருக்கிறார் வெற்றிமாறன்.