ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். இவரது இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் ஸ்வாசிகா.
2009 ஆம் ஆண்டு வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வாசிகா. அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம் ஆகிய திரைப்படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்து பிரபலமானவர் ஸ்வாசிகா. இது மட்டுமில்லாமல் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்திருப்பார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் ஸ்வாசிகா. அந்த வகையில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். இந்த படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நடிகை ஸ்வாசிகா தமிழ் சினிமாவில் தான் நுழைந்த ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், எனக்கு ஆரம்பத்திலேயே தமிழ் சினிமாவில் வைகை படம் மூலம் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு அப்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
ஏனென்றால் அப்போதுதான் கேரளாவில் இருந்து அமலாபால் தமிழ் சினிமாவில் நுழைந்து மைனா போன்ற ஹிட் படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக அவர் விஜய் என பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். நான் நமக்கும் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துவிட்டது நாமும் அவரை போல் ஆகிவிடுவோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்போது நான் நடித்த படங்கள் பெரிதாக போகவில்லை என்று பேசியிருக்கிறார் நடிகை ஸ்வாசிகா.