ஜோதிகாவின் இந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக இருந்தது… சிம்ரன் ஓபன் டாக்…

சிம்ரன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற முன்னணி நடிகை ஆவார். 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் சிம்ரன். தொடர்ந்து பூச்சூடவா விஐபி போன்ற…

simran

சிம்ரன் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற முன்னணி நடிகை ஆவார். 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் சிம்ரன். தொடர்ந்து பூச்சூடவா விஐபி போன்ற திரைப்படங்களில் நடித்தார். 1998 ஆம் ஆண்டு துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் சிம்ரன்.

பின்னர் கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், ரமணா, ஆகிய படங்களில் நடித்து 2000 த்தின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் உடன் நடித்து புகழ் பெற்ற அதிக சம்பளம் வாங்கக்கூடிய முன்னணி நடிகையாக திகழ்ந்தார் சிம்ரன்.

2003 ஆம் ஆண்டு தனது நீண்ட கால நண்பனை மணந்து கொண்ட சிம்ரன் அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். 2010 காலகட்டத்திற்கு பிறகு அவர் நாயகியாக நடிக்கவில்லை. பிறகு வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் இரண்டாம் கட்ட நடிகையாக தனது கேரியரை தொடங்கினார் சிம்ரன்.

இப்போது சசிகுமார் உடன் இணைந்து டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சிம்ரன். இந்த திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்றது. தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சிம்ரன் தனது சினிமா வாழ்க்கையை பற்றி பகிர்ந்திருக்கிறார். அப்போது அவர் சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நான்தான் என்று கூறியிருக்கிறார். அப்போது சில பர்சனல் காரணங்களால் ரஜினி சாரோடு நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். பின்பு பேட்ட படத்தில் தான் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று பகிர்ந்து இருக்கிறார் சிம்ரன்.