விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்று சில முக்கிய திருப்பங்கள் இடம்பெற்றன.
வித்யா மற்றும் ரோகிணி உரையாடும் காட்சிகளில், “மனோஜையும் என்னையும் பிரிக்க என் மாமியார் முயற்சி செய்கிறார்கள். ஆனால், நான் மனோஜை என் வழிக்கு கொண்டு வந்து, அவனுடைய அம்மாவையே வெறுக்க வைக்கிறேன்!” என்று ரோகிணி சொல்கிறார்.
அதன்பின் 30 லட்சத்தை மனோஜிடம் ஏமாற்றிய நபர் வித்யாவை காதலிக்கும் முருகனுடன் செல்கிறார். முருகனிடம் வேறு ஒருவரின் பிளாட்டை காட்டி, மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கிறார். இந்த நிலையில், முருகன் அந்த நபரை முத்துவை பார்க்க அழைத்துச் செல்கிறார். முத்து-முருகன் உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென முத்துவுக்கு சவாரி வந்ததால், ஏமாற்றிய நபரை முத்து பார்க்க முடியாமல் போகிறார்.
இதனைத் தொடர்ந்து, விஜயா மற்றும் பார்வதி, சாமியாரிடம் சென்று, “என் மகனுக்கு பணக்கார பெண்ணை பார்த்தேன். ஆனால், அவள் பணக்காரி இல்லை! என்னை ஏமாற்றி விட்டாள். இருவரையும் பிரிக்க வேண்டும் என்று விஜயா கூற சாமியார் ஒரு தாயத்தை கொடுத்து, “உங்கள் மகன் கையில் இந்த தாயத்தை கட்டுங்கள்; உங்கள் மருமகளை அவர் வெறுத்து விடுவார்,” என்கிறார்.
பிறகு வெளியே வரும் விஜயா, முதலில் மனோஜ்-ரோகிணி ஜோடியைப் பிரித்து, பிறகு முத்து-மீனாவையும் பிரிக்க வேண்டும். அதற்காக இன்னொரு தாயத்து வாங்க வேண்டும் என விஜயா கூற அதற்கு பார்வதி, முத்து-மீனா நல்லவங்க. அவர்களைப் பிரிக்காதே!” என அதிர்ச்சியுடன் கூற, விஜயா அவரை முறைக்கிறார்.
அதே நேரத்தில் ரோகினியும் அந்த சாமியாரிடம் சென்று “என் மாமியார் என்னை என் கணவருடன் வாழ விடமாட்டேன் என்கிறார்கள். அவர்களையும் பிரிக்க தாயத்தை கொடுங்கள்,” என்று கூற, சாமியாரும் ரோகினிக்கு ஒரு தாயத்தை கொடுக்கிறார்.
விஜயா வீட்டுக்குச் சென்று, அந்த தாயத்தை சாமி அறையில் வைக்கிறார். அப்போது, முத்து சாமி அறைக்குள் தற்செயலாக வர, “தாயத்து நல்ல விஷயம்தான். அப்பா கையில் கட்டுவோம்,” எனச் சொல்லி, அண்ணாமலையின் கையில் கட்டுகிறார். இதைக் கண்ட விஜயா அதிர்ச்சியடைந்து தாயத்தை கழற்றி முயற்சிக்கிறார்.
ஆனால் முத்து “நல்லது நடக்கணும் என்று தான் வேண்டினீர்கள் அல்லவா, எதற்காக கழட்ட வேண்டும் என்கிறார். மீனாவும் அதை ஆதரிக்க, “அதெல்லாம் உனக்கு புரியாது போடி,” என விஜயா கூறி, தாயத்தை கழற்ற முயற்சிக்கிறார். அப்போது அண்ணாமலை, ‘எதற்காக நீ இவ்வளவு பதட்டமடைகிறாய் என்று கேட்க விஜயா அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
அடுத்த வார ப்ரோமோவில் விஜயா, ரோகிணியை திட்ட, மனோஜ் திடீரென மனோஜ், எதற்காக இப்படி கத்துறீங்கல், முதல் ரூமை விட்டு வெளியே போங்க’ என விஜயாவை அதட்டுகிறார். இதைக் கேட்டு, ரோகிணி தாயத்து பலித்துவிட்டது! என்ற சந்தோஷத்தில் இருக்க, விஜயா அதிர்ச்சி அடைவதுடன் ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது.