தங்கலான் படம் இப்படி ஆனது எப்படினா… உருக்கமாக பேசிய பா ரஞ்சித்…

பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். அதை…

pa ranjith

பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். அதை தொடர்ந்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் வெற்றி பெற்று அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து கபாலி, காலா என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இரண்டு திரைப்படங்களை இயக்கினார் பா ரஞ்சித். அதன் மூலம் பிரபலமான இயக்குனராக மாறினார். தொடர்ந்து சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் பா ரஞ்சித்.

அது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ஜே பேபி, சேதுமான், ரைட்டர் போன்ற திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் பா ரஞ்சித். இவரின் படங்களில் அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை எடுத்துரைத்திருப்பார் பா ரஞ்சித்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பா ரஞ்சித் தங்கலான் படம் ஏன் நினைத்த அளவுக்கு போகவில்லை என்பதற்கான காரணத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், தங்கலான் படத்தை நான் மிகுந்த நம்பிக்கையுடன் எடுத்தேன். ஆனால் ஏன் அந்த படம் மக்களிடம் கனெக்ட் ஆகாமல் போனது என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் பா ரஞ்சித்.