லிங்குசாமி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் லிங்குசாமி. அதற்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக இருக்கிறார் லிங்குசாமி.
படம் இயக்குவதை தவிர தயாரிப்பாளராக தீபாவளி, வேட்டை, கும்கி, இடம் பொருள் ஏவல், உத்தம வில்லன், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார் லிங்குசாமி. இவர் இயக்கி மிகவும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம் தான் சண்டக்கோழி. இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் தானாம். அதைப்பற்றி லிங்குசாமி ஒரு நேர்காணலில் பகிர்ந்து இருக்கிறார்.
லிங்குசாமி கூறியது என்னவென்றால் சண்டக்கோழி ஸ்கிரிப்டை எழுதியவுடன் முதலில் விஜய் சாரிடம் தான் காட்டினேன். பாதி கதையை கேட்ட பிறகு இதில் ராஜ்கிரன் சார் வந்துவிட்டார் அதற்கு பிறகு எனக்கு என்ன இருக்கிறது என்று அவர் நடிக்காமல் மறுத்துவிட்டார். அதற்கு பிறகு சூர்யாவிடம் காட்டினேன். அதுவும் நடக்கவில்லை. அதற்கு பிறகு தான் நம்மிடமே ஒரு பையன் இருக்கான் எதுக்காக நம்ம வெளியே போய் தேடணும் என்று விஷாலை வைத்து அந்த படத்தை இயக்கினேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் லிங்குசாமி.