என்னை பார்த்து இந்த மாதிரி சொல்லிட்டாங்க… உருக்கமாக பேசிய அஸ்வத் மாரிமுத்து…

அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம்…

aswath marimuthu

அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஸ்வத் மாரிமுத்து.

ஓ மை கடவுளை திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருந்ததால் முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அஸ்வத் மாரிமுத்து. அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஓரி தேவுடா என்ற பெயரில் தெலுங்கில் அப்படத்தை ரீமேக் செய்தார்.

தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற திரைப்படத்தை இயக்கி அது திரையரங்குகளில் வெளியாகி மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத விதமாக லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அஸ்வத் மாரிமுத்து உருக்கமாக ஒரு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அஸ்வத் மாரிமுத்து கூறியது என்னவென்றால், என்னை நிறைய பேர் மிகவும் தவறாக பேசியிருக்கிறார்கள். இவன் மூஞ்சியை பார்த்தாலே அடித்து உடைக்க வேண்டும் போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். ஏன் இப்படி கூறினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இப்போது படம் வெளியாகி எனக்கு நல்ல பெயர் கிடைத்தவுடன் என்னை பற்றி தவறாக பேசியவர்கள் எல்லோரும் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை என்று மனம் திறந்து உருக்கமாக பேசி இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.