தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்.
2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் இவரது தோற்றத்திற்காக மிகவும் கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அதையும் தாண்டி தற்போது பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.
இயக்குனராக தற்போது புது அவதாரம் எடுத்துள்ள தனுஷ் சமீபத்தில் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அது நூறு கோடி வசூலை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு போகவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
தனுஷ் இயக்கிய இட்லிகடை திரைப்படம் ஏற்கனவே ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு பின்னர் மே மாதம் என்று கூறப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி ரிலீஸ் என்று கூறப்பட்டது. இப்போது அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்தும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தள்ளி போகும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் தனுஷ், அவர் இயக்கிய முதல் திரைப்படமான ராயன் படத்தை வேறு எந்த போட்டி திரைப்படமும் இல்லாமல் தனிச்சையாக வெளியிட்டதால்தான் அது கவனத்தை பெற்றது. அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை.
அதனால் இட்லி கடை திரைப்படத்தை சிங்கிளாக ரிலீஸ் செய்தால்தான் கவனத்தை பெற முடியும் என்று முடிவெடுத்த தனுஷ் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யலாம் என்று முன்னமே அறிவித்திருந்தார். ஆனால் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி போகவே அனைத்து படங்களின் ரிலீசும் குழப்பம் அடைந்து தள்ளிப்போனது. அதனால் இட்லி கடை திரைப்படத்தின் ரிலீசும் தள்ளிப்போனது. தற்போது அக்டோபர் 1ஆம் தேதி இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அன்றைய தினம் RJ பாலாஜி இயக்கிய சூரியா 45 திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக இட்லி கடை படத்தின் ரிலீஸை தள்ளிக் வைத்து கொள்ளலாம் என்று தனுஷ் முடிவு செய்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.