சித்தார்த் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் பின்னணி பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் உதவி இயக்குனராகமும் பணிபுரிந்தார் சித்தார்த். தொடர்ந்து ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கினார் சித்தார்த்.
நீண்ட காலம் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி புகழ் பெற்ற பிறகு 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு திரும்பினார் சித்தார்த். அந்த ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படத்தில் நடித்தார். பின்னர் காவியத்தலைவன், எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், சிகப்பு மஞ்சள் பச்சை, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 2, இந்தியன் 2, அருவம் போன்ற திரைப்படங்களில் நடித்தார் சித்தார்த்.
2023 ஆம் ஆண்டு சித்தா என்ற திரைப்படத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். சித்தா திரைப்படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் பலப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சித்தார்த். இவர் நடிகை அதிதி ராவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சித்தார்த் தான் சினிமாவிற்கு எதற்காக வந்தேன் என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் சினிமாவிற்கு இயக்குனராக வேண்டும் என்று நினைத்து தான் வந்தேன் ஆனால் நடிகன் ஆகிவிட்டேன். ஒரு படத்தை இயக்கி அதை மணிரத்தினம் சாரிடமும் கமல்ஹாசன் சாரிடமும் போட்டு காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் படம் இயக்குவது இப்போது என் கையில் இல்லை. அது எனது கனவாகும். அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் நான் என்னுடைய கனவை விடவில்லை அதை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் சித்தார்த்.