சினிமாவில் பல நாட்களாக போதை பொருள் உள்ளது… விஜய் ஆண்டனி அதிரடி…

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் ஒலிப் பொறியாளராக தனது கேரியரை தொடங்கிய விஜய் ஆண்டனி சுக்ரன் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். 2008 ஆம்…

vijay antony

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் ஒலிப் பொறியாளராக தனது கேரியரை தொடங்கிய விஜய் ஆண்டனி சுக்ரன் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார்.

தொடர்ந்து நான் அவன் இல்லை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், அங்காடித்தெரு போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. 2014 ஆம் ஆண்டு சலீம் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இசையமைப்பதை விட நாயகனாக நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் விஜய் ஆண்டனி.

2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் விஜய் ஆண்டனி. பின்னர் இந்தியா பாகிஸ்தான், சைத்தான், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வழக்கில் கைதானது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது அவர் கூறியது என்னவென்றால், போதைப்பொருள் என்பது சினிமாவில் இன்று நேற்று அல்ல பல நாட்களாக இருந்து வருகிறது விசாரணை சென்று கொண்டிருப்பதால் இப்போது நான் அதைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது என்று அதிரடியாக பதில் அளித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.