நடிகை அபிநயா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். இவர் பிறவியிலிருந்தே சரியாக பேச வராமையும் காது கேட்கும் திறன் குறைபாடும் கொண்டவர். ஆனாலும் தனது அபாரமான நடிப்பினால் பல ரசிகர்களை கொண்டவர். 2009 ஆம் ஆண்டு நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அபிநயா. இவரை அறிமுகம் செய்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் ஆகும்.
முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அபிநயா சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது போன்ற விருதுகளை வென்றார். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார் அபிநயா.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பிஸியான நடிகையாக இருந்து வருகிறார் அபிநயா. இந்நிலையில் தற்போது தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொண்டார் அபிநயா. அதற்குப் பிறகு ஒரு நேர்காணலில் பேசிய அபிநயா எதற்காக இப்போது உடனடியாக திருமணம் செய்தார் என்ற காரணத்தை பகிர்ந்திருக்கிறார்.
அபிநயா கூறியது என்னவென்றால் எங்களுக்கு இப்போது திருமணம் செய்யும் பிளான் இல்லை. சிறிது காலம் கழித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம் என்னுடைய அம்மா இறந்து விட்டார்கள். அதற்கு பிறகு நான் மிகவும் தனிமையாக இருந்தேன். அப்போதுதான் என்னுடைய கணவரின் வீட்டார் என் அப்பாவிடம் வந்து பேசி திருமணத்திற்கு முடிவு செய்தார்கள் என்று பகிர்ந்து இருக்கிறார் அபிநயா.