தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.
தொடர்ந்து 1990களில் தனது 18 வது வயதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக ஆனார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவந்தாலே அந்த படம் ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் விஜய்.
தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கபோவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் இறுதியாக கமிட்டான ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாக கூறியிருக்கிறார்.
தற்போது அரசியல் பணிகளில் பிஸியாக இருந்து வரும் நடிகர் விஜய் அவ்வப்போது ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அதில் ஐடி விங் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் ஐடி விங் ஊழியர்களிடம் நம்முடைய சோசியல் மீடியா படை மிகவும் கண்ணியமானதாக இருக்க வேண்டும். நம்முடைய படைதான் இந்தியாவிலேயே பெரிய படை என்று கூறப்படுகிறது. அதற்கு தகுந்தார் போல் சமூக அக்கறையுடன் நாம் பணியாற்ற வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.