விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் ஒரு காட்சிக்கு ரூ 4.5 கோடி செலவு செய்த படக்குழு… எதற்காக தெரியுமா…?

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.…

vijay

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது தந்தை S A சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.

தொடர்ந்து 1990களில் தனது 18 வது வயதில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய். ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக ஆனார் விஜய். 2010 காலகட்டத்திற்கு பிறகு விஜய் நடித்து வெளிவந்தாலே அந்த படம் ஹிட்டுதான் என்ற அளவுக்கு புகழின் உச்சிக்கு சென்றார் விஜய்.

தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருந்த போதும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய விஜய் அரசியலில் இறங்கபோவதாக கூறி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தான் இறுதியாக கமிட்டான ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறப்போவதாக கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் ஒரு காட்சிக்கு மட்டுமே ரூபாய் 400 கோடி செலவாகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் பகவந்த் கேசரி என்ற படத்தில் பாலகிருஷ்ணா குட் டச் பேட் டச் என்பதை பற்றி விளக்கியிருப்பார். அதை இந்த ஜனநாயகன் படத்தில் வைத்து விஜய் கூறினால் அது பலருக்கு விழிப்புணர்வாக இருக்கும் என்பதால் அந்த காட்சியை பயன்படுத்த உரிமம் பெறுவதற்காக இத்தனை கோடி செலவு செய்து இருக்கிறார்கள்.