தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது, குறிப்பாக முதலமைச்சர் விஜய் அவர்களின் தனித்துவமான அரசியல் அணுகுமுறை திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே அதிர வைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு, திமுகவின் முக்கிய முகமாகவும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உருவெடுத்துள்ள போதிலும், முதலமைச்சர் விஜய் அவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் முழுமையாக புறக்கணித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மேடைகளிலும் ஊடகங்களிலும் தவெக அரசுக்கு எதிராக எவ்வளவுதான் ஆவேசமாக குதித்தாலும், காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தாலும், விஜய் அவர்கள் அதற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் மௌனமாக கடந்து போவது திமுகவினருக்கு பெரும் ஏமாற்றத்தையே அளிக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்லாது, திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் மூத்த தலைவருமான ஆ. ராசா அவர்கள் தொடர்ச்சியாக பல பேட்டிகளை கொடுத்து, அடுக்கடுக்கான தத்துவார்த்த கேள்விகளை முதலமைச்சர் விஜய்யை நோக்கி வீசி வருகிறார். கட்சியின் மற்றுமொரு முக்கிய பேச்சாளரான ஆர்.எஸ். பாரதி மற்றும் பல இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட அரசியல்வாதிகளும் நாளுக்கு நாள் தவெக-வை வம்புக்கு இழுக்கும் நோக்கில் கடுமையான விவாதங்களை அரங்கேற்றுகின்றனர். ஆனால், இவர்கள் எத்தனை முறை பேட்டி கொடுத்தாலும், எவ்வளவு தூரம் தங்களின் தொண்டையை கிழித்து கொண்டு கத்தினாலும், விஜய் அவர்கள் இவர்களில் ஒருவரை கூட தனது அரசியல் எதிரியாகக் கருதாமல், ஏறெடுத்தும் பார்க்காமல் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்.
முதலமைச்சர் விஜய் அவர்களின் இந்த அலட்சிய போக்குக்கு பின்னணியில் ஒரு மிக ஆழமான மற்றும் தெளிவான அரசியல் வியூகம் ஒளிந்திருக்கிறது என்பதை அரசியல் நோக்குநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விஜய்யின் ஒட்டுமொத்த அரசியலின் ஒரே டார்கெட், ஒரே இலக்கு திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டும்தான். கட்சியில் இருக்கும் மற்ற அனைவருமே வெறும் அம்புகள் மட்டும்தான் என்றும், எய்தவனை வீழ்த்தினால் மட்டுமே ஒற்றை குடும்பத்தின் வாரிசு அரசியல் ஆதிக்கத்தை தமிழக மண்ணில் இருந்து முழுமையாக வேரறுக்க முடியும் என்பதிலும் விஜய் மிகவும் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், கீழ்மட்ட தலைவர்களின் சலசலப்புகளுக்கு பதில் அளித்து தனது நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்க அவர் சற்றும் விரும்புவதில்லை.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த பிம்பத்தை சிதைப்பதில் விஜய் ஏற்கனவே தனது முதல் கட்ட இமாலய வெற்றியை பெற்றுவிட்டார் என்றே கூற வேண்டும். தமிழகத்தின் முதலமைச்சராக, அசைக்க முடியாத அதிகார மையமாக வலம் வந்த மு.க.ஸ்டாலின் அவர்களை, தற்போதைய சூழலில் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினர் கூட ஆக முடியாத அளவிற்கு தேர்தல் களத்தில் படுதோல்வி அடைய செய்து, அவரது அரசியல் எதிர்காலத்திற்கே விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இத்தோடு தனது டார்கெட்டை நிறுத்தி கொள்ளாமல், வரும் நாட்களிலும் மு.க.ஸ்டாலினின் அரசியல் பெயரையும், கடந்த கால தவறுகளையும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து அம்பலப்படுத்தி, அவரது பிம்பத்தை இன்னும் முற்றிலுமாக டேமேஜ் செய்யும் வேலைகளில் தவெக மிக கச்சிதமாக ஈடுபட்டு வருகிறது.
அரசியல் களத்தில் தனக்கு இணையான ஒரு தலைவரோடு மட்டுமே மோத வேண்டும் என்ற பிடிவாத குணத்தை கொண்டவர் விஜய் என்பதை அவரது தற்போதைய நடவடிக்கைகள் நமக்கு தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. திமுகவில் இருக்கும் இரண்டாந்தர மற்றும் மூன்றாந்தர அரசியல்வாதிகள் தங்களின் இருப்பை காட்டிக் கொள்வதற்காகவும், ஊடக வெளிச்சத்திற்காகவும் தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டே இருப்பார்கள் என்பது விஜய்க்கு நன்றாகவே தெரியும். நாம் பதில் சொல்லாமல் மௌனம் காக்கும் பட்சத்தில், அவர்களாகவே கேள்வி கேட்டு, கேட்டு, ஒரு கட்டத்தில் அலுத்துப்போய், எவ்வித பலனும் இன்றித் தானாகவே ஓஞ்சு போயிடுவாங்க என்ற உளவியல் ரீதியான உத்தியை விஜய் மிகச் சாதுரியமாகக் கையாண்டு வருகிறார்.
சுருக்கமாகச் சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாரிசு அரசியல் கட்டமைப்பைத் தகர்ப்பதற்கு மு.க.ஸ்டாலின் என்ற ஒற்றைப் புள்ளியை மட்டும் குறிவைத்துத் தாக்கும் விஜய்யின் இந்த ‘நோ ரெஸ்பான்ஸ்’ பாணி திராவிட பாரம்பரியத்தினரை நிலைகுலைய செய்துள்ளது. சண்டைக்கு அழைக்கும் அரசியல்வாதிகளை திரும்பிப் பார்க்காமல், நேராக கோட்டையின் அதிபதியை மட்டுமே வீழ்த்தும் இந்த மாஸ் அரசியல் நகர்வு தவெக தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. எதிரிகளின் அம்பு எது என்ற கவலை இல்லாமல் எய்தவனை மட்டுமே குறிவைக்கும் இந்த சாணக்கியத்தனமான வியூகம், வரும் காலங்களில் திமுகவை முற்றிலும் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி, தமிழ்நாட்டில் தவெக-வின் ஆதிக்கத்தை மேலும் பல மடங்கு உயர்த்த போவது மட்டும் உறுதி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
