காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக இந்தியா எந்த நேரத்திலும் பாகிஸ்தானை தாக்கும் என்றும் இதனால் இந்தியா – பாகிஸ்தான் போர் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் எல்லையில் இந்தியா ராணுவ பயிற்சி எடுத்து வருவதால் பாகிஸ்தான் அச்சத்தில் உள்ளதாகவும் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பாகிஸ்தானின் நட்பு நாடு என்று கூறப்படும் சீனா மற்றும் அரபு நாடுகள் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஆப்கான் – பாகிஸ்தான் எல்லையிலும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
பாகிஸ்தான், தெஹ்ரீக்-இ-தாலிபான், பலூச்சிஸ்தான் விடுதலை இயக்கம் மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் – கோரசான் போன்ற அமைப்புகளுடன் தொடர்ச்சியான மோதலில் ஈடுபட்டுள்ளது. இதனாலேயே பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் அழுத்தத்தில் உள்ளன.
முன்னதாக நெருங்கிய தோழனாக இருந்த ஆப்கன் தாலிபான்கள், இப்போது பாகிஸ்தானுக்கு முக்கிய சவாலாக மாறியுள்ளதுடன், நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை பிரிக்கும் டுரண்ட் கோடு எல்லைப் பகுதியில் நிலவும் போர் பதற்றம் தொடர்கிறது. இதனால் பாகிஸ்தான் கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், இந்தியா, ஆப்கன் ஆகிய இரண்டு நாட்களும் இரண்டு திசைகளில் இருந்து தாக்கினால், பாகிஸ்தான் என்ற நாடே காணாமல் போய்விடும் என்றும் கூறப்படுகிறது.