உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை இந்திய ராணுவத்திற்காக வழங்கிய தமிழக சிறுவன்.. குவியும் பாராட்டுக்கள்..!

  தமிழ்நாட்டை சேர்ந்த எட்டு வயது சிறுவன், 10 மாதங்கள் சேமித்த அனைத்து பணத்தையும் இந்திய இராணுவத்திற்கு வழங்கி மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கரூரில் உள்ள அரசு பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவர்,…

boy

 

தமிழ்நாட்டை சேர்ந்த எட்டு வயது சிறுவன், 10 மாதங்கள் சேமித்த அனைத்து பணத்தையும் இந்திய இராணுவத்திற்கு வழங்கி மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார்.

கரூரில் உள்ள அரசு பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவர், உண்டியல் தொகையில் தனது சேர்த்து வைத்த காசும் குடும்பத்தினரிடம் பெற்ற பரிசு பணமும் சேர்ந்து இருப்பதாக கூறினார். “நம்மை பாதுகாக்கிறவர்களுக்கு உதவ விரும்பியதால் அனைத்து பணத்தையும் இந்தியா இராணுவத்திற்கு வழங்க முடிவு செய்தேன்’ என்று அவர் கூறினார்.

இந்த சிறுவனின் வாழ்வில் சிறந்தவை எல்லாம் அடைய வாழ்த்துகிறேன். உந்துதல் அளிக்கும் குழந்தை, இதற்கு அவரது பெற்றோர்கள் மற்றும் மற்ற பெரியவர்கள் அனைவருக்கும் கிரெடிட்,” என்று ஒரு X பயனர் பதிவு செய்தார். மற்றொருவர், “எத்தனை நல்ல இளம் மனிதன்! நாடு பாதுகாப்பாக உள்ளது, எதிர்காலம் பிரகாசமாக உள்ளது!” என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் இந்த சிறுவன் செய்தியாளர்களிடம் பேசிய போது ‘நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்காக என்னால் முடிந்த உதவியை செய்துள்ளேன். என்னுடைய அப்பா அம்மா கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்த காசை உண்டியலில் போட்டு சேமித்து வைத்திருந்தேன். அந்த காசிலிருந்து நான் அவ்வப்போது வயதானவர்களுக்கு உதவி செய்வேன்.

ஒருநாள் பேருந்து நிலையத்தில் ஒரு வயதானவர் இருந்தார், அவருக்கு போர்வை வாங்கி கொடுத்தேன். இதுபோல சின்ன சின்ன உதவிகள் செய்து கொண்டிருக்கும் போது தான் என்னுடைய அப்பா எதிரி நாட்டினர் நம் நாட்டின் மீது குண்டு போடுகின்றனர், ராணுவத்தினர் அதை கஷ்டப்பட்டு தடுத்து நிறுத்துகின்றனர் என்று கூறினார்.

உடனே எனக்கு ராணுவத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் நான் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை இந்திய ராணுவ வீரர்களுக்காக கொடுத்த முன்வந்துள்ளேன்’ என்று கூறினார். அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.