தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே, அவரது அரசியல் ஆளுமை மாநில எல்லைகளைக் கடந்து தேசிய அளவில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தீவிர அரசியலில் தடம் பதித்து, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வரலாற்று வெற்றி பெற்ற விஜய், இன்று தமிழ்நாடு தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் ஒரு மிக முக்கிய தேசியத் தலைவராக உருவெடுத்துள்ளார். தேசிய அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் மூத்த தலைவர்களுக்கே சவால் விடும் வகையில், அவரது அரசியல் நகர்வுகளும் முதிர்ச்சியான செயல்பாடுகளும் தற்போது டெல்லி தர்பாரையே உற்றுநோக்க வைத்துள்ளன.
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தைக் குறிப்பிடலாம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மிக மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த முதலமைச்சர்கள் பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்த போதிலும், ஒட்டுமொத்த ஊடகங்களாலும், அரசியல் விமர்சகர்களாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து அவர் முன்வைத்த துல்லியமான தரவுகளும், அவரது அசாத்திய ஆளுமையும் ஒட்டுமொத்த கூட்ட அரங்கையும் தன் வசம் ஈர்த்தன.
விஜய் அவர்களின் உரையின் போது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எவ்வித சுணக்கமும் இன்றி, அவரது கருத்துக்களை மிகவும் ரசித்து, உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்த நிகழ்வு அங்கிருந்த பல மூத்த அதிகாரிகளையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக மாற்று கட்சி தலைவர்களின் உரை மீது இத்தகைய தனிப்பட்ட கவனம் திரும்புவது அரிதான ஒன்று என்ற சூழலில், பிரதமர் மோடி காட்டிய இந்த ஈர்ப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. ஒரு புதிய முதலமைச்சரின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே இது பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் தமிழகத்தில் பாஜகவின் கொள்கைகளை மிக தீவிரமாக விமர்சித்தவர், தேர்தல் களத்தில் அவர்களுக்கு எதிராகக் கடுமையான அரசியல் யுத்தம் நடத்தி அவர்களை தோற்கடித்தவர் என்ற போதிலும், முதலமைச்சர் விஜய் மீது பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு நல்ல மரியாதையும் நன்மதிப்பும் ஏற்பட்டுவிட்டது என்பது இக்கூட்டத்தின் மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, விஜய் அவர்களின் கம்பீரமான நடத்தையும், கண்ணியமான அணுகுமுறையும் பிரதமரின் பாராட்டைப் பெற்றுத் தந்துள்ளன.
பிரதமரை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் முதலமைச்சர் விஜய் மீதான இந்த மரியாதையும் நன்மதிப்பும் கூடிய சீக்கிரமே ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். ஏனெனில், திரைக்கு பின்னால் நடக்கும் வெற்று பில்டப் அரசியலை தாண்டி, அடிமட்ட மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு களத்தில் நின்று சாதிக்கும் உண்மையான மக்கள் தலைவர்களை தேசிய மேலிடம் எப்போதுமே உன்னிப்பாக கவனிக்கும். அந்த வகையில், விஜய்யின் நேர்மையான நிர்வாக வேகம் அமித்ஷாவின் அரசியல் வியூகங்களையும் வியக்க வைக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஏனெனில், ஜனநாயகத்தில் மக்களின் பேராதரவை பெற்று, மக்களுக்காகவே வாழும் ஒரு உண்மையான மக்கள் தலைவனை யாராலும் புறக்கணிக்கவோ அல்லது பகைத்து கொள்ளவோ முடியாது என்ற எதார்த்த உண்மையை டெல்லி தலைமை தற்போது நன்கு உணர்ந்துள்ளது. தனது தனித்துவமான ஆளுமையால் தமிழ்நாட்டின் ஒற்றை சக்தியாக உருவெடுத்துள்ள முதலமைச்சர் விஜய், வரும் காலங்களில் தேசிய அளவிலான முக்கிய முடிவுகளிலும், கூட்டாட்சி தத்துவத்தின் குரலாகவும் மிக பலமாக ஒலிக்க போகிறார் என்பது இந்த நிதி ஆயோக் கூட்டத்தின் வெற்றிகரமான அறிமுகத்தின் மூலம் எழுதப்படாத விதியாக மாறியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
