கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக சென்னை மாரத்தானில் பங்கேற்ற ஈஷா பிரம்மச்சாரிகள்!

சத்குருவின் வழிகாட்டுதலில் இயங்கும் ‘ஈஷா வித்யா’ பள்ளி மாணவர்களின் கல்விக்காக, ஈஷா யோகா மையத்தை சேர்ந்த 30 பிரம்மச்சாரிகள் சென்னையில் இன்று (04/01/2026) நடைபெற்ற ‘சென்னை மாரத்தான்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த மாரத்தான் நிகழ்வில்…

isha

சத்குருவின் வழிகாட்டுதலில் இயங்கும் ‘ஈஷா வித்யா’ பள்ளி மாணவர்களின் கல்விக்காக, ஈஷா யோகா மையத்தை சேர்ந்த 30 பிரம்மச்சாரிகள் சென்னையில் இன்று (04/01/2026) நடைபெற்ற ‘சென்னை மாரத்தான்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த மாரத்தான் நிகழ்வில் ஈஷா பிரம்மச்சாரிகள் 10 கி.மீ, 21 கி.மீ மற்றும் 32 கி.மீ ஆகிய பிரிவுகளில் ஓடினர்.

இதில் பங்கேற்ற ஈஷா பிரம்மச்சாரி சுவாமி அதிந்திரா கூறுகையில், “கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் நகரங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும். இந்த சூழலில்தான் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சத்குருவின் வழிகாட்டுதலில் ஈஷா வித்யா பள்ளிகள் உருவாக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட முறையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் தரமான ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படுகிறது. இங்கு கல்வி பெறுபவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் முதல் தலைமுறையாகக் கல்வி பெறுபவர்களாக இருக்கின்றனர்.

இப்பள்ளிகளில் படிக்கும் 60 சதவீதம் மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலமாகவே கல்வி பெற்று வருகின்றனர். மேலும் மொத்த மாணவர்களில் 48 சதவீதம் பேர் கிராமப்புறப் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு 50 வயதாகிறது, இந்தக் குழந்தைகளின் கல்விக்காக மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்பது நிறைவாக இருக்கிறது,” எனக் கூறினார்.

அதேபோன்று ஈஷா சன்னியாசி சுவாமி நிராகரா கூறுகையில், “எனக்கு 70 வயது ஆகிறது, இந்த வயதிலும் மாரத்தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஓடுவதற்கு காரணம் அதன் பின் இருக்கும் நோக்கம்தான். அதாவது, ஈஷா வித்யா பள்ளி மாணவர்களின் கல்விக்கு நிதி திரட்டுவதற்காக எனும்போது அதுவே மிகப்பெரிய ஊக்கத்தைத் தருகிறது. மேலும் யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருவதால் என்னால் ஓட முடிகிறது,” எனக் கூறினார்.

ஈஷா வித்யா பள்ளிகள் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 18 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் கல்விப் பணியாற்றி வருகின்றன. தற்போது தமிழகத்தில் 9 பள்ளிகளும், ஆந்திராவில் 1 பள்ளியும் என மொத்தம் 10 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் ஆண்டுதோறும் 10,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதுவரை 2,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பள்ளிகளில் இருந்து தேர்ச்சி பெற்று வெளியேறியுள்ளனர்.

இப்பள்ளிகள் கிராமப்புற மாணவர்களுக்கு சர்வதேசத் தரத்திலான ஆங்கில வழிக்கல்வியை வழங்கி வருகின்றன. இந்த மாணவர்களின் கல்விக்கு உதவித்தொகை திரட்டும் நோக்கில், ஈஷா பிரம்மச்சாரிகள் ஆண்டுதோறும் சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.