காரணம் என்ன?! தேவாரப்பாடலும், விளக்கமும் – 16

பாடல் மாதி லங்கிய மங்கைய ராட மருங்கெலாம்போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச்சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே. விளக்கம்: அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும், ஊர்…


a31c0a3a47789cd6a6e8be1ee5c03d4f

பாடல்

மாதி லங்கிய மங்கைய ராட மருங்கெலாம்
போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே.

விளக்கம்:

அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும், ஊர் மருங்கெலாம் பூத்துள்ள அழகிய தாமரை மலர்கள் தம்மிடம் நிறைந்துள்ள தேனை ஒழுக விடுவதும் ஆகிய நீர்வளம் மிக்க பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், ஒளி மிக்க அழகிய தமது திருமேனியில் வெண்ணீறு அணிந்து எழுந்தருளிய இறைவரே! காதுகள் இரண்டனுள் ஒன்றில் குழையையும் ஒரு காதில் சங்கத்தோட்டையும் அணிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன