காயத்தால் உயிரிழந்த 12 வயது சிறுமி.. மருத்துவ சிகிச்சை அளிக்காத பெற்றோருக்கு சிறை..!

12 வயது சிறுமி காயம் அடைந்த நிலையில் அந்த சிறுமிக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

202004170942245074 Tamil News youth one month jail sentence for went to see his SECVPF

12 வயது சிறுமி காயம் அடைந்த நிலையில் அந்த சிறுமிக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்த நிலையில் அந்த சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த டெக்சாஸ் என்ற பகுதியில் 12 வயது சிறுமிக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அந்த காயத்தை அவருடைய அம்மா மற்றும் அவருடைய இரண்டாவது கணவர் ஆகிய இருவரும் சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது.

சிறுமியின் காயத்திற்கு தகுந்த சிகிச்சை அளிக்காமல் வீட்டில் உள்ள சில மருந்துகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை மட்டும் கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காயத்தின் காயத்திற்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் அந்த சிறுமி மூன்று நாள் கழித்து உயிரிழந்த நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் சிறுமியின் காயத்திற்கு பெற்றோர் சரியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறப்பட்டதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் டெக்ஸ்சாஸ் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் சிறுமியை சரியாக கவனிக்காத பெற்றோர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.