இந்தியாவில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆனால் பாகிஸ்தானுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு..!

இந்தியா மற்றும் இலங்கையில்   செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை 13வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஐசிசி இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பெங்களூருவில்…

world cup
இந்தியா மற்றும் இலங்கையில்   செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை 13வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஐசிசி இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியம், கௌஹாத்தியில் உள்ள ACA ஸ்டேடியம், இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியம், விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA ஸ்டேடியம் மற்றும் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாசா ஸ்டேடியம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டிக செப்டம்பர் 30 அன்று பெங்களூருவில் நடைபெறும். முதல் அரையிறுதி குவாஹாத்தி அல்லது கொழும்பில் அக்டோபர் 29 அன்றும், இரண்டாவது அரையிறுதி அக்டோபர் 30 அன்று பெங்களூருவில் நடைபெறும். இறுதிப் போட்டி பெங்களூரு அல்லது கொழும்பில் நவம்பர் 2 அன்று நடைபெறும்.

இந்த போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான். இதில் பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் என்றும், இந்தியாவில் பாகிஸ்தான் அணி விளையாட அனுமதி இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இங்கிலாந்து 4 முறையும்,  நியூசிலாந்து ஒருமுறையும் வென்றுள்ளது.

2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ரன்னர்-அப் ஆக வந்த இந்திய மகளிர் அணி, இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஸ்மிருதி மந்தனா  துணை கேப்டனாக இருப்பார்.