சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு தான் பொறுப்பு எடுத்து கொள்வதாக தெரிவித்தார்.
214 ரன்கள் இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே 172/4 என்ற ஸ்கோர் இருந்தபோது 17வது ஓவரில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவர் ஒரு அற்புதமான சிக்ஸர் அடித்தார், ஆனால் இறுதியாக அவர் 12 ரன்களில் அவுட் ஆகி விட்டார். தோனி அவுட் ஆனபோது, சிஎஸ்கே ஐந்து பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டன.
அப்போது களத்தில் இருந்த ஷிவம் துபே அடுத்த பந்தில் ஒரு நோபாலில் 7 ரன்கள் எடுத்தாலும், அவர் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியவில்லை. யாஷ் தயால் கடைசி மூன்று பந்துகளை அபாரமாக வீசி வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
போட்டி முடிந்தவுடன் பேட்டியில் தோனி கூறியபோது, “நான் பேட்டிங் செய்ய வந்தபோது தேவைப்படும் ரன்கள் அடிப்படையில், இன்னும் சில ஷாட்களை வெற்றி வாய்ப்பாக மாற்றியிருந்தேன் என்றால் அழுத்தத்தை குறைக்க முடிந்திருக்கும்” என்று கூறினார். “நான் தோல்விக்கு பொறுப்பேற்கின்றேன். தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கம் பெற்றனர்,ஆனால் அதை எங்களால் வெற்றிக்கு திருப்ப முடியவில்லை. மேலும் ரோமாரியோ ஷெப்பர்ட் அற்புதமாக விளையாடினார். அவர் ஆட்டத்தின் போக்கை 2 ஓவர்களில் மாற்றிவிட்டார்’ என்று தோனி கூறினார்.
“நாம் இன்னும் யார்க்கர்களை பயிற்சி செய்ய வேண்டும். ஒரு பந்துவீச்சாளர் யார்க்கர்களை அதிகம் பயிற்சி பெற்றால் தான் விக்கெட்டுகளை வீழ்த்தி ரன்களையும் கட்டுப்படுத்த முடியும். பத்திரனா சரியாக யார்க்கர் போடாவிட்டாலும் அவரிடம் அவரது பந்துவீச்சில் வேகம் இருக்கிறது. அதனால் அவரால் பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்” என்றார்.