எனக்கு அறுவை சிகிச்சைகளும், காயங்களும் ஏற்பட்டுள்ளன. என் நண்பர்கள், குடும்பத்தில் சிலர் புற்றுநோயை வென்றிருக்கிறார்கள். உயிருடன் இருப்பதே பெரிய விஷயம். எனது வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தம் இருக்க வேண்டும். அதை முழுமையாக பயன்படுத்த விரும்புகிறேன்” என்றார்.
“என் வாழ்க்கை முடியும் நேரத்தில், என்னைப் பார்த்து, ‘நான் கொடுத்த உயிரை திருப்பி கொடு என கேட்கும் போது நான் முழுமையாக வாழ்ந்தேன் என நினைக்க வேண்டும். அதுதான் என் ஆசை. வாழ்க்கையை ஆழமாக, நேரத்தை வீணாக்காமல் வாழ வேண்டும்” என்று கூறினார்.
தன்னுடைய பயணத்தை நினைவு கூர்ந்த அஜித், கூறுகையில்: “நடிப்பு என் திட்டத்தில் இருந்ததே இல்லை. நான் தவறுதலாக நடிகனாகி விட்டேன். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு, ஒரு ஆட்டோ தயாரிப்பு நிறுவனத்தில் ஆறு மாதம் வேலை செய்தேன். 18 வயதில் பைக்கிங் தொடங்கினேன். அப்போது, நன்கு புரிந்துகொள்ளும் முன்பே விளம்பரங்களிலும், பத்திரிகை புகைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டேன், இப்போது முழுநேர நடிகனாகிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.