AI தொழில்நுட்பம் உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கல்வி, மருத்துவம் உள்பட அனைத்து துறைகளிலும் இந்த டெக்னாலஜி நுழைந்துவிட்டது என்பதும், இதனால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில், குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் ஒரு நல்ல தீர்வு AI டெக்னாலஜி மூலம் கிடைப்பதால் பெரும்பாலானோர் இதற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உலகில் உள்ள அனைத்து துறைகளிலும் இன்னும் சில ஆண்டுகளில் AI ஆதிக்கம் செலுத்தி விடும் என்று கூறப்படும் நிலையில், தற்போது Interior Designer துறையிலும் நுழைந்துவிட்டது என்பது, ஒரு பெண் தொழிலதிபரின் சமூகவலைதள பதிவிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் தொழில் அதிபர் காமியா குப்தா என்பவர், தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வீடியோவில், “தனக்காக புதிதாக அமைக்கப்பட்ட அறைக்கு Interior Designer தேவை என்று முடிவு செய்தேன். எனது அறைக்கு தேவையான சித்திரங்கள், பெயிண்ட், எந்த இடத்தில் எந்த பொருளை வைக்க வேண்டும் என்பதை ChatGPT இடம் உரையாடல் நடத்தினேன். அப்போது ChatGPT கொடுத்த தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு பைசா செலவில்லாமல், தற்போது நான் Interior Designer பணியை எப்படி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன்,” என்று கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும், “மிகவும் அருமையாக Designer ஐடியாவை ChatGPT கொடுத்திருக்கிறது,” என்று பலர் பாராட்ட, சிலர் “உலகம் முழுவதும் பல வேலைகளை AI கைப்பற்றி வருகிறது,” என்ற அச்சத்தையும் தெரிவித்தனர்.
“இந்த அனுபவம் எனக்கு மிகவும் புதுமையாக இருந்தது என்றும், என்னுடைய மனதில் பல ஆண்டுகளாக இருந்த எண்ணம், ஒரே ஒரு உரையாடலால் நிஜமாகிவிட்டது என்றும், ஒரு AI ஆர்வலராக நான் இந்த புதிய அம்சங்களை வரவேற்கிறேன். ஒரு நல்ல விஷயத்தை கற்றுக் கொண்டேன்,” என்று காமியா குப்தா தெரிவித்துள்ளார்.
AI டெக்னாலஜிக்கு நன்றி கூறும் அதே நேரத்தில், ஒரு சின்ன பயமும் என் மனதில் ஓரத்தில் இருக்கிறது, என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.