94 சீட், கூட்டணி ஆட்சி.. பேராசை பாஜகவை கூட்டணியில் இருந்து விலக்க ஈபிஎஸ் முடிவு?

  அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமித்ஷா இந்த கூட்டணியை உறுதி செய்தவுடன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு நான்கு நாட்கள் மௌனமாக இருந்த எடப்பாடி…

eps amit

 

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அமித்ஷா இந்த கூட்டணியை உறுதி செய்தவுடன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு நான்கு நாட்கள் மௌனமாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பின்னர் திடீரென ஞானோதயம் வந்தது போல், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என்றும், அதிமுக ஆட்சி மட்டுமே அமைக்கும் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

“பாஜக எங்களுடன் கூட்டணியில் மட்டும் தான் இருக்கிறது, கூட்டணி ஆட்சி கிடையாது” என்று ஈபிஎஸ் அடித்து கூறியது பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நயினார் நாகேந்திரன் “கூட்டணி ஆட்சியா அல்லது தனித்து ஆட்சியா என்பது டெல்லி மேலிடம் முடிவு செய்யும்” என்று கூறியிருப்பதை அடுத்து, எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி, பாஜகவுக்கு 94 தொகுதிகள் வேண்டும் என்றும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்றும் கூறியிருப்பதை பார்த்த நிலையில், பாஜக கூட்டணிக்கே வேண்டாம் என்று எடப்பாடி கூட்டணி முடிவு செய்துவிட்டதாகவும், ஒரே வாரத்தில் இந்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுவது, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவை ஒதுக்கி வைத்துவிட்டு, தேமுதிக, பாமக, விஜய் கட்சி உள்ளிட்டவற்றை தங்கள் கூட்டணியில் இணைத்து போட்டியிட எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும், அப்படியே கூட்டணி ஆட்சி அமையும் நிலையில் கூட, தமிழக கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் அவருக்கு எந்தவித நெருடலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.