ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால், தற்போது காஷ்மீரின் ஒட்டுமொத்த சுற்றுலாத்துறை முடங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையால் ஜம்மு-காஷ்மீருக்கு நல்ல வருமானம் கிடைத்துவந்த நிலையில், பயங்கரவாதிகளின் தாக்குதல் காரணமாக அந்த வருமானம் முற்றிலும் நின்றுவிட்டது.
மேலும், “மன அமைதியும் இல்லை, எப்போது எந்த பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சத்துடன் வாழ்கிறோம்” என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதே நேரத்தில், கடந்த சில மாதங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி அமைதியாக வாழ்ந்து வந்த மக்கள், இந்த திடீர் தாக்குதலால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனைக் தொடர்ந்து, “பாகிஸ்தான் இருக்கும் வரை எங்களுக்கு நிம்மதி இல்லை” எனக் கூறி, அந்த நாட்டை ஒழிக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஏராளமான இளைஞர்கள் ராணுவத்தில் சேர முன் வந்துள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில், ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்கள் பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதால், விரைவில் மாநிலத்தில் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.