ரூ.26க்கு 2GB டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி.. ஜியோ அறிவித்துள்ள சூப்பர் திட்டம்..!

  முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனத்தின் புதிய அதிரடியாக ₹26 ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்லது. இந்த திட்டத்தின்படி 2GB டேட்டா, 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்…

jio

 

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனத்தின் புதிய அதிரடியாக ₹26 ப்ரீபெயிட் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்லது. இந்த திட்டத்தின்படி 2GB டேட்டா, 28 நாட்கள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் புதிய திட்டமான ₹26க்கு 2GB ஹைஸ்பீடு டேட்டா மற்றும் 28 நாள் செல்லுபடியாகும் ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது JioPhone பயனர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

₹26 திட்டத்தில் என்னென்ன கிடைக்கும்?

டேட்டா: 2GB ஹைஸ்பீடு இணையம்

விகிதத்தை மீறும் பின் வேகம்: 64kbps

செல்லுபடியாகும் காலம்: 28 நாட்கள்

டேட்டா மட்டுமே இந்த திட்டத்தில் உண்டு. வாய்ஸ் கால் செய்ய முடியாது, SMS அனுப்ப முடியாது.

தகுதி: JioPhone பயனர்களுக்கு மட்டும்

ஹைஸ்பீடு டேட்டா முடிந்த பிறகும், குறைந்த வேகத்தில் இணையத்தை தொடரலாம். மெசேஜிங் மற்றும் லைட் பிரௌசிங்குக்கு போதுமானது.

₹26 திட்டத்தை Jio.com, MyJio செயலி ஆகியவற்றின் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.

JioPhone பயனர்கள், இத்திட்டத்தை எளிதாக அணுகி ரீசார்ஜ் செய்யலாம். இதே போன்ற திட்டம் Airtel மற்றும் Vi ஆகியவற்றிலும் உண்டு. ஆனால் அவற்றில் ₹26 திட்டத்தில் உள்ள சலுகைகள் இவைதான்:

Airtel ₹26 திட்டம்: 1.5GB டேட்டா – 1 நாள் மட்டுமே செல்லுபடியாகும்

Vi ₹26 திட்டம்: 1.5GB டேட்டா – 1 நாள்மட்டுமே செல்லுபடியாகும்

ஆனால் Jio-வின் இந்த புதிய திட்டம் ₹26க்கு 28 நாள் பயன்படுத்தும் வகையில் உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

இந்த திட்டத்தின் முக்கியத்துவம் என்னவெனில் ₹26 திட்டம், மிக குறைந்த செலவில் நீண்ட கால டேட்டா பயன்பாடு தேவைப்படும் JioPhone பயனர்களுக்கு ஒரு வரப்பிரசாதமா இருக்கும். மிகவும் குறைந்த வருமானம் மற்றும் கிராமப்புற பயனர்களுக்கான இணைய அணுகலை விரிவாக்குவதில், Jio-வின் டிஜிட்டல் உட்சேர்க்கை நோக்கத்தை இது வெளிப்படுத்துகிறது. இந்த புதிய திட்டம், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சவாலை எழுப்பும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது,