உலகையே மயக்கிய Ghibli இமேஜை வடிவமைத்தவர் ஒரு இந்திய இளைஞரா? ஆச்சரிய தகவல்..!

  உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக Ghibli இமேஜ் வைரல் ஆகி வருகிறது என்பதும், ஒரே சில நாட்களிலேயே இந்த இமேஜ் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது சாட்ஜிபிடியின் ஓப்பன் ஏஐ நிறுவனத்திற்கே…

ghibli

 

உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக Ghibli இமேஜ் வைரல் ஆகி வருகிறது என்பதும், ஒரே சில நாட்களிலேயே இந்த இமேஜ் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது சாட்ஜிபிடியின் ஓப்பன் ஏஐ நிறுவனத்திற்கே பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில், Ghibli இமேஜை வடிவமைத்த குழுவில் ஒரு இந்தியர் இருந்துள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரபுல்லா தரிவார் என்ற இந்தியர் ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் வேலை செய்யும் நிலையில், அவர் Ghibli இமேஜ் செய்யும் குழுக்களில் ஒருவராக இருந்துள்ளார்.

“நாங்கள் ஒரு முக்கியமான ஒன்றை உருவாக்குகிறோம் என்று ஏற்கனவே கணித்தோம். ஆனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு, குறிப்பாக இந்தியாவிலிருந்து இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்தியா, எங்கள் Ghibli இமேஜை உலக சந்தையாக மாற்றி உள்ளது. உலக அளவில், ஓப்பன் ஏஐ வரலாற்றிலேயே மிகப்பெரிய வளர்ச்சியின் ஒன்றாக இந்த Ghibli இமேஜ் அமைந்தது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவர் புனேவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பின்னர், அமெரிக்காவில் சென்று உயர் படிப்பு படித்தார். அதன் பின் 2016 ஆம் ஆண்டு ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் இன்டர்ன் ஆக சேர்ந்து, ஒரு ஆண்டுக்குள் அவர் முழு நேர ஊழியராக மாறினார்.

“எதிர்காலத்துக்கு இன்னும் புதிய வகையான முயற்சிகளை செய்வதில் ஆர்வமாக இருக்கிறோம். கார்ட்டூன்ஸ் ஸ்டூடியோக்கள் உள்பட பல ஐடியாக்கள் இருக்கின்றன. நாங்களும் எங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு தேவையான, வேடிக்கையான மற்றும் உபயோகமான அம்சத்தை தர இருக்கிறோம். இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பது எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது,” என்றும் தரிவால் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“திருமண அழைப்பிதழ் முதல் சினிமா பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் வரை இதனை பயன்படுத்தியது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் எங்கள் இமேஜை பயன்படுத்தியதை மறக்கவே முடியாது,” என்றும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.