எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராகுங்கள்.. ஜம்மு காஷ்மீருக்கு மத்திய அரசு எச்சரிக்கை.. போர் தொடங்குகிறதா?

  பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடக்கும் அவசரகால பணிகளில் ஒன்று ஜம்முவிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எந்த சூழ்நிலைகளையும் கையாண்டு செயல்பட தயாராக இருக்க அரசு எச்சரித்துள்ளது. ஜம்முவிலுள்ள…

modi amitshah

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடக்கும் அவசரகால பணிகளில் ஒன்று ஜம்முவிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எந்த சூழ்நிலைகளையும் கையாண்டு செயல்பட தயாராக இருக்க அரசு எச்சரித்துள்ளது.

ஜம்முவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை சுற்றறிக்கையில், அனைத்து ஊழியர்களும் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவசர நிலைகளை கையாள முழு அளவில் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அவசர தேவைகள், முக்கியமான மருந்துகள் மற்றும் அடிப்படை மருத்துவ உபகரணங்களை உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிலையில் வைத்திருக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளது.

மருத்துவமனை ஊழியர்கள் தேவையில்லாத விடுப்புகளை தவிர்க்கவும், தொடர்ந்து சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவமனை வளாகத்திலேயே இருக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், 24×7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது, இது அவசரநிலை நடவடிக்கைகளை முறையாக கையாளும்.

மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளை கூண்டோடு அழிக்க இந்தியா திட்டமிட்டு செயல்படுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்க இந்தியா பல்முக திட்டங்களை திட்டமிடுகிறது. பாகிஸ்தானை தண்டிக்க பிரதமர் மோடி அரசு எடுத்த 5 முக்கிய முடிவுகள்:

1. இந்துஸ் நீர் ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தம்: பாகிஸ்தான் எல்லை பயங்கரவாதத்திற்கு ஆதரவை நிறுத்தும் வரை இந்த ஒப்பந்தத்தை தொடர இந்தியா தயாரில்லை. இது பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2. அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியின் மூடல்: உடனடியாக இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. சரியான அனுமதியுடன் இந்தியாவுக்குமே 1, 2025க்குள் அதே வழியாக திரும்ப வேண்டும்.

3. பாகிஸ்தானியர்களுக்கான SAARC விசா விலக்கு திட்டம் ரத்து: இதன் கீழ் வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் இருக்கிற பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு கிளம்ப வேண்டும்.

4. பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் ‘Persona Non Grata’ என அறிவிப்பு: அவர்கள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு நீங்க வேண்டும்.

5. இந்திய தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களை இந்தியா திரும்ப அழைக்கிறது: இப்பதவிகள் இரு நாடுகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.