மனிதர்களுக்கு 40 வயதைத் தாண்டினாலே ஒவ்வொரு வியாதியாக எட்டிப் பார்க்கத் தொடங்கி விடுகிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டிப்படைப்பது சர்க்கரை நோய்தான். அதனால் கால் வலியும் வந்து விடுகிறது. முக்கியமாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு இப்படி கால் வீக்கம் வருகிறது.
அவர்களுக்கு அவர்களது உடல் எடையையே தாங்க முடியவில்லை. அதனால் கால் வீங்கி விடுகிறது. இதற்காக என்னவெல்லாமோ செய்வார்கள். ஆங்கில மருந்துகளைக் காட்டிலும் என்றைக்குமே ஆயுர்வேத மருந்துகள் தான் முழுவதுமாக ஒரு நோயைக் குணப்படுத்தும். இயற்கையை மிஞ்சும் வைத்தியம் உலகில் இல்லை. அந்த வகையில் இந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு இருக்கு. வாங்க பார்க்கலாம்.
தினமும் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை சுத்தம் செய்து முனையையும், அடிப்பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைங்க.
மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால் ஒரு சில மாதங்களில் ரத்த புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரச்சினைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுர் வேத வைத்தியர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக ஒரு நல்ல விஷயத்தை நாம் கேள்விப்படும்போது அதை நாலு பேருக்குத் தெரியப்படுத்துவது மிகவும் நல்லது. எத்தனையோ பேர் இந்த விவரம் தெரியாமல் அவதிப்படுவர். அதனால் அவர்களுக்கும் இது பிரயோஜனமாக இருக்கும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


