நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கணுமா… 7 நாள் 7 கஷாயம் ரெடி!

நோய் வருவதே உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான். ஒருவர் எளிதில் காய்ச்சல், சளித் தொல்லைகளுக்கு ஆளாகிறார் என்றால் அவருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே காரணம். இதற்கு நாம் என்ன செய்வது?…

sukku malli coffee

நோய் வருவதே உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால்தான். ஒருவர் எளிதில் காய்ச்சல், சளித் தொல்லைகளுக்கு ஆளாகிறார் என்றால் அவருடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதே காரணம். இதற்கு நாம் என்ன செய்வது? அதிக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது எப்படி? பார்க்கலாமா… வாரம் ஒரு முறை கஷாயம் வைத்துக்குடித்து வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

திங்கட்கிழமை வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

செவ்வாய்க்கிழமை:கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

புதன்கிழமை:தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

வியாழக்கிழமை:சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

வெள்ளிக்கிழமை:வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

murungaikeerai soupசனிக்கிழமை: முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை:சுக்கு மல்லி காபி குடிக்கலாம். இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.