நான் வாயை திறந்தால் வேற மாதிரி ஆகிடும்… யோகி பாபு ஓபன் டாக்…

யோகி பாபு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான யோகி பாபு…

yogi babu

யோகி பாபு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான யோகி பாபு அன்றிலிருந்து தனது பெயரை யோகி பாபு என்று சூட்டிக்கொண்டார்.

தொடர்ந்து பையா, தில்லாலங்கடி, தூங்கா நகரம், கலகலப்பு, அட்டகத்தி, சூது கவ்வும், மான் கராத்தே, அரண்மனை, காக்கி சட்டை போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் யோகி பாபு. அதைத்தொடர்ந்து மண்டேலா போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார் யோகி பாபு.

தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வரும் யோகி பாபுவை பற்றி சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ஒரு தயாரிப்பாளர் யோகி பாபு எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வருவதில்லை மரியாதை தருவதில்லை அவர் பணத்தாசை கொண்டவர் போன்ற சர்ச்சையான பல விஷயங்களை பேசி இருந்தார். அதற்கு யோகி பாபு பதில் கூறி இருக்கிறார்.

யோகி பாபு கூறியது என்னவென்றால், ஒரு நிகழ்ச்சிக்கு நான் வரவில்லை என்பதால் நீங்களாக ஒரு முடிவு எடுத்து பேசி விடாதீர்கள். எனக்கு எத்தனை பேரு பணம் தரவேண்டி இருக்கிறது தெரியுமா. அந்த பட்டியலை நான் கொடுக்கட்டுமா. எந்தவித விஷயத்திலும் முழுமையாக ஆராயாமல் நீங்கள் பேசக்கூடாது. நான் வாயைத் திறந்து பேசினால் வேற மாதிரி ஆகிவிடும் என்று கூறியிருக்கிறார் யோகி பாபு.