தனுஷ் சொன்னாருல அப்போ அது உண்மை தான்… வெற்றிமாறன் ஓபன் டாக்…

வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்து தொலைக்காட்சி தொடரில் பணியாற்றி அதற்குப் பிறகு சினிமாவிற்குள் நுழைந்தார் வெற்றிமாறன். 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன்…

vetrimaaran

வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்து தொலைக்காட்சி தொடரில் பணியாற்றி அதற்குப் பிறகு சினிமாவிற்குள் நுழைந்தார் வெற்றிமாறன். 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். முதல் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

அடுத்ததாக 2011 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷுடன் இணைந்து ஆடுகளம் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளை வென்று வெற்றி பெற்றது. அடுத்ததாக விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை பாகம் ஒன்று இரண்டு போன்ற வெற்றி பழங்களை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். இவரது படங்கள் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று இருக்கும்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார் வெற்றிமாறன். இவர் இயக்கிய வடசென்னை திரைப்படம் வெற்றி பெற்றதால் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை பல வருடங்களாக ரசிகர்கள் கேட்டு வந்தனர். அது சம்பந்தமான ஒரு செய்தியை தனுஷ் கூறியிருப்பார்.

அதாவது தனுஷ் ஒரு நிகழ்ச்சியில் வடசென்னை 2 உருவாகிறது கண்டிப்பாக வரும் என்று கூறினார். இது உண்மையா இல்லையா என்று தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் தொகுப்பாளர் கேட்டார். அப்போது வெற்றிமாறன் தனுஷ் சொல்லிவிட்டார் இல்லையா அப்போ அது உண்மையாக தான் இருக்கும். வடசென்னை 2 படம் கண்டிப்பாக வருகிறது அந்த படத்தை தனுஷ் தயாரிக்கிறார் மற்றும் அதில் நடிக்கவும் செய்கிறார் என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன்.