வடிவேலு சினிமாவுல நடிக்காமப் போனதுக்கு காரணம் இதுதானா?… இப்பத்தானே தெரியுது!

ஆரம்பத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலு அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் வெளியே தெரிய ஆரம்பித்தார். அவருக்கே உரிய பாடிலாங்குவேஜ், டைமிங் காமெடி இரண்டும்…

ஆரம்பத்தில் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலு அறிமுகம் ஆனார். அதன்பிறகு அவர் விஜயகாந்த் நடித்த சின்னக்கவுண்டர் படத்தில் வெளியே தெரிய ஆரம்பித்தார். அவருக்கே உரிய பாடிலாங்குவேஜ், டைமிங் காமெடி இரண்டும் அவரை தமிழ்சினிமாவின் நகைச்சுவை நடிகர்களின் வரிசையில் முன்னுக்குக் கொண்டு வந்தது.

அவரே தனக்கென ஒரு குழுவை வைத்துக்கொண்டு காமெடி டிராக்குகளை அமைத்தார். அதனால் படுபிசியான நடிகராகி விட்டார். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன், விஜய், அஜித், பிரசாந்த் என அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் படங்களில் நடித்து மாஸ் காட்டினார்.

வைகைப்புயல் ஆனதும் வடிவேலு தமிழ்சினிமாவின் நகைச்சுவை நாயகர்கள் வரிசையில் புதிய ட்ரெண்ட்செட்டை உருவாக்கியவர். அவர் நடித்த பல படங்களின் டயலாக்குகள் இன்று வரை மீம்ஸ்களாக உலா வருகின்றன. ஆனால் இடையில் நீண்ட கேப் விழுந்தது. அதுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது. அப்போது விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் பிரச்சனை எல்லாம் வந்தது. அதே நேரம் வடிவேலு படத்தில் நடிக்காம இருந்ததுக்கு யாரைக் காரணம் சொல்கிறார்னு பாருங்க.

நகைச்சுவை ஒண்ணும் கல்வெட்டு கிடையாது. நான் பெரிய டைரக்டர்கிட்ட போய் நடிச்சேன். நான் டயலாக் சொல்ல சொல்ல சிரிச்சிக்கிட்டே இருந்தாரு. நான் பேப்பர்ல டைப் பண்ணி கொடுக்கிறேன். அதை மட்டும் பேசுங்க என்று சொன்னார். அப்போ நான் டெவலப் பண்ண கூடாதா என்று கேட்டதற்கு அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டார் பெரிய டைரக்டர். அவருக்கும் எனக்கும் தான் நடுவுல சண்டை வந்துச்சு. அவரால் தான் 2, 3 வருஷம் நடிக்காம இருந்தேன். அவர் பேரைச் சொல்ல நான் விரும்பல என்றார் வடிவேலு.

தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி. உடன் இணைந்து வடிவேலு கேங்கர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இது நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.