தங்கமகன் படத்தின் போது ரஜினி செஞ்ச அந்த ஒரு காரியம்.. நிஜமாவே மனுஷன் தங்கமகன் தான்..

Published:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் எப்படி பல சிரமங்களைக் கடந்து இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே. நடிக்க வந்த காலகட்டங்களில் பல அவமானங்களையும், இன்னல்களையும் தாங்கி நெஞ்சில் உரமாக்கி இன்று வீருநடை போட்டு வருகிறார். ரஜினியின் கேரியரில் 1980 முதல் 1990 வரை அவர் நடித்த படங்கள் தான் அவரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உயர்த்தியது. நடித்த பெரும்பாலான படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ரஜினியும், கமலும் அந்தக் காலகட்டங்களில் சமமான போட்டியில் இருந்தனர்.

இப்படி சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ரஜினியின் சம்பளமும் மளமளவென எகிறியது. ரஜினியை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நிறைய லாபத்தைப் பார்த்தனர். ஆனால் அதே வேளையில் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் அவர்களுக்குத் துணையாக பக்க பலமாக நிற்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு சம்பவம் தான் அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன தங்கமகன் திரைப்படம் வெளியீட்டின் போது நேர்ந்தது.

இயக்குநர் ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினி, பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் 1983-ல் தீபாவளி வெளியீடாக வந்த படம் தான் தங்கமகன். சத்யா மூவிஸ் பேனரில், டி.ஜி.தியாராஜன் மற்றும் தமிழழகன் ஆகியோர் தயாரித்திருந்தனர். இந்தப் பட ஷுட்டிங் மும்முரமாக நடைபெற்று வந்த வேளையில் ரஜினிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்தப் படத்தின் ஷுடடிங் பணிகள் மூன்று மாதங்களுக்கு மேல் தாமதமானது. அதன்பின் ரஜினி குணமாகி மீண்டும் இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். படம்வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

காதுக்குள்ளள சும்மா கொய்ங்-ன்னு கேக்குதா.. நாட்டாமை படத்தில் இந்த விசில் சப்தம் எப்படி வந்துச்சு தெரியுமா?

தங்கமகன் வெற்றி பெற்ற படமாக அமைந்த நிலையில், ரஜினிக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாராஜன் ரஜினிக்கு ஒரு பெட்டியில் வைத்துக் கொடுக்கிறார். அதனைப் பெற்றுக் கொண்ட ரஜினி அடுத்த மூன்றாவது நாள் அதே பெட்டியை தன் நண்பர்கள் மூலம் ஆர்.எம்.வீரப்பனிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆர்.எம்.வீரப்பன் என்ன இது என்று கேட்க, நீங்கள் கொடுத்த சம்பள பணம்பாக்கி என்று கூற, அது அவருக்குச் சேர வேண்டிய பணம் தானே ஏன் என்னிடம் திரும்பக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு ரஜினியின் நண்பர்கள், படத்தின் ஷுட்டிங்கின் போது உடல் நலக்குறைவால் இந்த மூன்று மாத காலங்கள் படப்பிடிப்பு நின்று போயிருக்கும். நீங்கள் வெளியில் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட வேண்டியது இருக்கும். எனவே இந்தப் பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று ரஜினி கூறியதாக நண்பர்கள் சொல்ல ஆர்.எம்.வீரப்பன் நிஜமான தங்கமகனை நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...