தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தை பிடித்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் நகர்வுகளை கவனமாக செய்து வருகிறார். தற்போது பிஸியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக விக்ரம் வேதா பட புகழ் புஷ்கர் காயத்ரி ஆகியோருடன் இணைந்து புது படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் தனது அடுத்தபடிகளை கவனமுடன் எடுத்து வைக்கிறார், தமிழ் சினிமாவில் அவர் நிலையான இடத்தை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் நிலவி வருகிறது.