பிக் பாஸ் 8: சாச்சனா தான் ஒளறிட்டாளே.. Bigg Boss போட்ட பலே திட்டம்.. சல்லி சல்லியா நொறுக்கிய ஜாக்குலின்

By Ajith V

Published:

பிக் பாஸ் ரசிகர்கள் ஒட்டு மொத்த பேரும் தற்போது விஜய் சேதுபதி என்ட்ரியை இந்த வார இறுதி எபிசோடில் பார்ப்பதற்காக காத்திருந்து வருகின்றனர். கடந்த ஏழு சீசன்களாக கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல் வார இறுதியில் எந்த போட்டியாளர்களிடமும் எந்தவித சமரசமும் இல்லாமல் கமல் காரசாரமாக பேசுவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

ஆனால் தற்போது ஆரம்பமாகியுள்ள எட்டாவது சீசனுக்கு முன்பாக கமல்ஹாசன் இதிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் புதிய ஆங்கராக மற்றொரு நடிகர் விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டிருந்தார். கமல்ஹாசன் போல யாருக்கும் ஆதரவாக இல்லாமல் விஜய் சேதுபதியால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியுமா என்ற கேள்வி இருந்தது.

ஆனால் அதற்கு முல் எபிசோடிலேயே தனது நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் விஜய் சேதுபதி. இதனால், வார இறுதியிலும் பட்டையைக் கிளப்புவார் என தெரிகிறது. அதற்கு சான்றாக தற்போது வெளியான ப்ரோமோவும் அதில் விஜய் சேதுபதி பேசிய விஷயங்களும் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது.

அதேபோல போட்டியாளர்களும் கடந்த ஒரு வாரமாக சில நேரங்களில் மட்டும் தான் மிக சுவாரஸ்யமாக விளையாட்டை எடுத்துச் சென்று வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் போட்டியாளர்கள் மிகுந்த சித்தை எடுத்து விளையாட்டை விளையாட்டாக பார்த்து அதிரடி கிளப்ப வேண்டும் என்பதும் ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

அந்த வகையில் முதல் நாளே லிமினேட்டான நடிகை சாச்சனா நான்கு நாட்கள் கழித்து பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தார். அப்போது அவர் தான் பார்த்த போட்டியாளர்கள் தொடர்பான விஷயங்களையும் அனைவரிமும் பகிர்ந்து கொண்டதுன் மட்டுமில்லாமல் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து சில டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார்.

ஒரு பார்வையாளராக சாச்சனா சொன்ன விஷயத்தை கேட்டுக் கொண்ட போட்டியாளர்கள் இனிவரும் நாட்களில் தங்கள் மீது இருக்கும் குறைகளில் கவனம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் தான் சாச்சனா குறித்து ஜாக்குலின் தெரிவித்த கருத்துக்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இது பற்றி சவுந்தர்யாவிடம் பேசும் ஜாக்குலின், “சாச்சனா முழு பிக் பாஸையும் பார்க்கல. அவ தான் ஒளறிட்டாளே, பிட்டு பிட்டா தான் பாத்துட்டு வந்தேன்னு. அவ என்ன பாக்கணுமோ அதை மட்டும் தான் பிக் பாஸ் டீம் போட்டு காமிச்சுருக்காங்க. சாச்சனா ரொம்ப ஜாலியா தான் பேசுறா. ஆனா, நாம இங்க இருக்கோம். அவ வெளிய போய் எல்லாத்தையும் பாத்துட்டு வந்துருக்கா.

அதுனால நம்மள வெளிய அனுப்பிட்டாங்க, நாம உள்ள போய் எல்லாருக்கும் பதிலடி கொடுக்கணும்னு சாச்சனாவை மோட்டிவேட் பண்ணி அனுப்பிருப்பாங்க” என ஜாக்குலின் கூறுகிறார். இதனால், சாச்சனாவை வைத்து பிக் பாஸ் போட்ட திட்டத்தை ஜாக்குலின் கண்டுபிடித்து விட்டதாகவே தெரிகிறது.