என் அம்மா அப்பாவிடம் மன்னிப்பு கேட்க தான் இந்த படம் எடுத்தேன்… அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு…

அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம்…

am

அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் அஸ்வத் மாரிமுத்து.

ஓ மை கடவுளே திரைப்படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டிருந்ததால் முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அஸ்வத் மாரிமுத்து. அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஓரி தேவுடா என்ற பெயரில் தெலுங்கில் அப்படத்தை ரீமேக் செய்தார்.

தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற திரைப்படத்தை இயக்கி அது திரையரங்குகளில் வெளியாகி மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பாராத விதமாக லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது என்னவென்றால் நான் டாக்டராக வேண்டும் என்ற என் பெற்றோரின் கனவை நினைவாக்க முடியாமல் போனதற்காகவும் அடங்காத இன்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் என் பெற்றோருக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம் தான் டிராகன். என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.