தமிழில் வெளியான முதல் பேசும் படம் காளிதாஸ். அந்தப் படத்தைத் தயாரித்தவர் இரானி. இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை அந்தக்கால பத்திரிகையாளர் குண்டூசி கோபால் பகிர்ந்துள்ளார். இந்தக் காளிதாஸ் படத்தைப் பொருத்தவரைக்கும் முழுநீளப் படமாகத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது யாருக்கும் இல்லை. இந்தப் படத்தயாரிப்பின்போது பல வினோத விஷயங்கள் எல்லாம் நடைபெற்றன.
ஒலிப்பதிவுக்கருவிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கையில் அவை ஆங்கில வெர்ஷனை மட்டும்தான் பயன்படுத்துமா? அல்லது தமிழ் வெர்ஷனையும் பதிவு செய்யுமா என்ற சந்தேகம் அந்தக் காலத்தில் தயாரிப்பாளர் இரானி உள்பட பலருக்கும் இருந்தது. அதனால பரீட்சார்த்தமாக ஒரு சிலரைத் தமிழ்ல பேச வச்சிப் பார்ப்போம். அதுக்குப் பின்னால முடிவு எடுக்கலாம்னு திட்டமிட்டனர்.
அப்படி அவர் பரீட்சார்த்தமாக பம்பாய்க்குப் போனவர்தான் இன்று தமிழ்சினிமாவின் முதல் கதாநாயகி என்று சொல்லப்படும் டிபி.ராஜலட்சுமி. பம்பாய் போன உடனே முதல்ல ஒரு பாட்டைக் கொடுத்துப் பாடச் சொன்னாங்க. இன்னொரு பாட்டைக் கொடுத்து இதைப் பாடிக்கொண்டே ஆடுங்கன்னு சொன்னாங்க. எனக்கு ஆடத்தெரியாதுன்னு அவர் சொல்ல, பரவாயில்ல. தெரிஞ்ச அளவு ஆடுங்கன்னு சொன்னாங்க. தயாரிப்பாளர் சொன்னதும் மன்மதன் பாணமடா. அது மார்பிலே பாயுதடா என்று பாடிக்கொண்டே ஆடினார் ராஜலட்சுமி.
அந்தப் பாடலைக் காளிதாஸ் மட்டுமல்லாமல் வேறு சில படங்களிலும் இணைத்துக் காட்டப்பட்டது. குண்டூசி கோபால் இந்தப் படத்தைப் பொருத்தவரை முதல் தமிழில் பேசும்படம்னு சொல்வது சரியாக இருக்காது என்றார். ஏன்னா கதாநாயகி தமிழ்ல பேசுவாங்க. கதாநாயகன் தெலுங்குல பேசுவாங்க. இன்னொரு நடிகர் இந்தியில பேசுவாரு. காளிதாஸைத் தொடர்ந்து சாகர் மூவி டோனால் காலவரிசி என்ற படம் வெளியானது. அதுதான் முதல் தமிழ் பேசும் படம் என்கிறார் குண்டூசி கோபால். காளிதாஸ் படத்தைப் பொருத்தவரைக்கும் முதல் தமிழ் பேசும்படமாக இல்லாவிட்டாலும் அந்தப் படம் வெற்றி பெற்றது என்பதுதான் உண்மை.