பிக் பாஸ் 8: அது என்னோட ஸ்ட்ரேட்டஜி.. சாச்சனா எலிமினேஷனுக்கு காரணம் நான்தான்.. விஜய் சேதுபதியிடம் வசமாக சிக்கிய போட்டியாளர்..

By Ajith V

Published:

Sachana Elimination in Bigg Boss : இதுவரையிலும் எந்த பிக் பாஸ் சீசனிலும் இல்லாத அளவிற்கு சில மாற்றங்கள் இந்த சீசனில் அறிமுகமாகி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக முதல் நாள் முடிவிலேயே எலிமினேஷன் இருக்கும் என பிக் பாஸ் அறிவித்திருந்தது போட்டியாளர்கள் மத்தியிலேயே பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது.

பிக் பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியில் நாம் சக போட்டியாளர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கே கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதற்கு முன்பாகவே அதுவும் அதிகம் பேர் நாமினேட் செய்யும் நபரும் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அறிவித்ததும் பெரிய விவாதத்தை உண்டு பண்ணி இருந்தது. சக போட்டியாளர்களை வீட்டுக்குள் இருக்கும் ஒருவர் நாமினேட் செய்தாலும் இறுதி முடிவு மக்கள் வாக்களிப்பின் மூலம் தான் இருக்கும்.

ஆனால் போட்டியாளர்கள் நாமினேஷன் முடிவிலேயே எலிமினேட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சாச்சனா முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டை விட்டு டிராபியையும் உடைத்து விட்டு வெளியேறி இருந்தார். அவர் திரும்ப வருவாரா வரமாட்டாரா என்பது பற்றி பல கேள்விகள் எழுந்த நிலையில் தான் சுமார் 4 நாட்கள் கழித்து சர்ப்ரைஸ் ஆக வீட்டுக்குள் வந்திருந்தார் சாச்சனா.

இளம் போட்டியாளராக இருந்த சாச்சனா வீட்டை விட்டு வெளியே சென்றதும் பலரும் ஏங்கிப் போயினர். ஆனால் அவர் திரும்பி வந்ததும் மிக உற்சாகமாக போட்டியாளர்கள் வரவேற்ற நிலையில் இத்தனை நாட்கள் அவர் பார்த்த விஷயத்தையும் அனைவரிடமும் சாச்சனா பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதியும் வர சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டது பற்றி சில கருத்துக்கள் பேசப்பட்டது.

சாச்சனாவை Fatman ரவீந்தர் திட்டம் போட்டு வெளியே அனுப்பியதாக விஜய் சேதுபதி குறிப்பிட அதை அவரும் ஒப்புக்கொண்டு தொடர்ந்து பேசினார். “நாமினேஷனில் 3 வோட்கள் எனக்கு விழுந்து விட்டது. நான், ஜாக்குலின், சாச்சனா என பேரும் அந்த பட்டியலில் இருந்தோம். நான் யாருக்கு அதிகம் வோட் என எண்ணிக் கொண்டே வரும் போது நானும் ஜாக்குலினும் முன்னிலை வகித்திருந்தோம்.

இப்போது எங்கள் பக்கம் இருந்து போட்டியை திருப்பி விட வேண்டும் என்றால் வேறு பெயரை இழுத்து விட வேண்டுமென்று தான் நான் சாச்சனா பெயரை கூறினேன்” என ரவீந்தர் விளக்கம் அளித்தார். இதன் பின்னர் பேசிய விஜய் சேதுபதி, “நமக்கு ஆப்பு இருக்குன்னு தெரியும் போதே வேறு திட்டம் போட வேண்டுமென மூளைக்குள் ஒரு ஸ்ட்ரேட்டஜி வேலை செய்துள்ளது” என வேடிக்கையாக பதிலை தெரிவிக்கிறார்.