24 மணி நேரத்தில் எலிமினேட் ஆகி மனமுடைந்த சாச்சனா.. சர்ப்ரைஸா வீட்டுக்கு வந்ததும் எமோஷனலான அர்னவ்!

By Ajith V

Published:

தமிழில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கி இருந்தனர். இதில் ஒவ்வொரு போட்டியாளர்கள் தொடர்பாக பல கருத்துக்களையும் ரசிகர்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே அதிக விமர்சனத்தை சந்தித்த போட்டியாளர் தான் சீரியல் நடிகர் அர்னவ்.

இவர் திவ்யா என்ற பிரபல சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்திருந்தனர். ஆனால் அதே நேரத்தில் தன்னுடன் இணைந்து நடித்த அன்ஷிதா என்ற சீரியல் நடிகையை அர்னவ் காதலித்து வந்ததாகவும், அவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் நடிகை திவ்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக அன்சிதா திவ்யாவிடம் பேசும் சில ஆடியோக்களும் இணையத்தில் லீக் ஆகி இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. திவ்யா – அர்னவ் விஷயத்திற்கே ஒரு முடிவு எட்டப்படாமல் தான் இருந்து வந்தது. அப்படி ஒரு சூழலில் தான் அர்னவ் பிக் பாஸ் வீட்டில் நுழைய அவரது காதலி என வதந்தி பரப்பப்பட்ட அன்சிதாவும் அதே வீட்டில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார்.

எப்படி இந்த இரண்டு பேரை ஒரே வீட்டில் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டில் ஆட வைக்கலாம் என்றும் பல விதமான விமர்சனங்களும் விஜய் டிவி மீது உருவாகி இருந்தது. அதிலும் அர்னவ் தொடர்ந்து நாடகம் போட்டு வருவதாகவும், சீரியல் நடிகர் போல தேர்ந்தவராக பிக் பாஸ் வீட்டிலும் இருந்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் முதல் நாளிலேயே எலிமினேட்டான சாச்சனா திரும்பி வந்த போது அர்னவ் செய்த விஷயம் அவரை விமர்சித்தவர்களை கூட சபாஷ் போட வைத்துள்ளது. மகாராஜா படத்தில் நடித்து கவனம் ஈர்த்த சாச்சனா, பிக் பாஸ் வீட்டில் இளம் போட்டியாளராக நுழைந்திருந்தார். ஆனால், 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் என பிக் பாஸ் அறிவிக்க, பலரும் நாமினேட் செய்த சாச்சனா கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியியேறினார்.

மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அவருக்கு கொடுக்கப்பட்ட டிராபியையும் உடைத்து விட்டு வெளியே போனார் சாச்சனா. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் வீட்டுக்குள் வந்ததும், ‘தங்கச்சி, தங்கச்சி’ என அழைத்து கொண்டே வந்த அர்னவ், “என் தங்கச்சி திரும்ப வந்ததுக்கு எப்படி அவ டிராபி உடைஞ்சு மனசு உடைஞ்சுதோ அது உடையாம இருக்குறதுக்கு என்னோட டிராபிய என் தங்கச்சிக்காக கொடுக்குறேன். வாழ்த்துக்கள். இந்த டிராபி உன்னோடது தான்” எனக்கூறி சாச்சனாவின் கையில் நீட்டுகிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத சாச்சனா, வியப்பில் அர்னவை பார்த்ததுடன் அவரை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கவும் செய்கிறார். “நீ வெளிய போனப்போ வேற மாதிரி போனே. ஆனா வரும் போது ஃபயரா வந்தே. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த டிராபிய நீயே வெச்சுக்கோ” என அர்னவ் தேற்றவும் செய்கிறார்.

அர்னவ் மீது தனிப்பட்ட முறையில் நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் சாச்சனவிடம் அவர் கட்டிய அன்பு ரசிகர்களையும் கரைய வைத்துள்ளது.