பிக் பாஸ் 8: சாச்சனாவுக்கு ஒரு நியாயம்.. அர்னவுக்கு ஒரு நியாயமா.. ரகளை செய்த அன்ஸிதா.. முகத்திரையை கிழித்த சவுந்தர்யா..

By Ajith V

Published:

Anshitha Vs Sachana : தமிழில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க நிறைய சண்டைகளும், சுவாரஸ்யமான சம்பவங்களும், கண்ணீர் விட்டதும் என பல விஷயங்கள் நடைபெற்றிருந்தது. இவற்றையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு சமீபத்தில் சாப்பாட்டிற்காக சாச்சனா மற்றும் அன்ஸிதா சண்டை போட்ட விஷயம் பெரிய அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த முதல் வாரம் அனைவருமே புதிதாக பழகி இருந்ததால் பெரிய அளவில் அவர்களுக்குள் சண்டை எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் இரண்டாவது வாரம் ஆரம்பித்த வேகத்திலேயே பல போட்டியார்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டனர். அன்ஸிதா மற்றும் முத்துக்குமரன் ஆகியோரின் சண்டை ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்த, இன்னொரு புறம் ஜெஃப்ரி அனைத்து போட்டியாளர்களையும் எதிர்த்து துணிச்சலாக பேசியிருந்த விஷயமும் கவனம் பெற்றிருந்தது.

இப்படியாக பல சண்டை, சச்சரவுகள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் சாச்சனா தனக்கு உணவை அன்ஸிதா தரவில்லை என கூறி சண்டை போடுகிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அன்ஸிதா சமீபத்தில் சமைத்து கொடுக்க இதில் சாச்னா எக்ஸ்ட்ரா உணவு கேட்டு அவர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது பற்றி அன்ஸிதாவிடம் நேரடியாக கேட்கும் சாச்சனா, நான் எக்ஸ்ட்ரா உணவு கேட்டும் நீங்கள் கொடுக்கவில்லை என்றும் இப்போது மீதம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் என்றும் கேட்கிறார். இன்னொரு பக்கம் அன்ஸிதாவோ சாப்பாட்டு விஷயத்தில் நான் யாருக்கும் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் என்றும் நீ கேட்டிருந்தால் நிச்சயம் நான் கொடுத்திருப்பேன் என்றும் கூறி தனது காரணத்தை விளக்குகிறார்.

ஆனால் தங்கள் சொல்வது தான் சரி என இருவருமே மூச்சு விடாமல் பேசிக் கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் ஏங்கிப் போ அன்ஸிதா, கண்ணீர் விடவும் தொடங்குகிறார். இன்னொரு பக்கம் சாச்சனா கண்ணீர் விட்டு கலங்கி போக சாப்பாட்டு விஷயத்தில் எல்லாம் இப்படி செய்கிறார்கள் என்றும் புலம்புகிறார். அவருக்கு ஆதரவாக ஆண்கள் அணியில் சிலர் சாச்சனா பக்கம் இருக்க இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அப்படி ஒரு சூழலில் தான் அன்ஸிதா செய்த ஒரு விஷயம் குறித்து சௌந்தர்யாவும் முத்துக்குமரனும் பின்னால் உரையாடுகின்றனர். முத்துக்குமாரிம் இது பற்றி பேசும் சவுந்தர்யா, “ஒரு ஸ்பூன் முதலில் வைக்கிறார்கள். இன்னொரு ஸ்பூன் கேட்ட போது ஏன் வைக்கவில்லை. அப்படி சாச்சனா கேட்டு வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?” என சொல்கிறார்.

தொடர்ந்து பேசும் சௌந்தர்யா, “அனைவருக்கும் அளவாக வேண்டும் என்று சாச்னாவுக்கு எக்ஸ்ட்ரா கொடுக்கவில்லை. அந்த சமயத்தில் அன்ஸிதா சொன்ன ஒரு வார்த்தை என் காதில் கேட்டது. ‘அர்னவுக்கு கொஞ்சம் கொடு. அவன் என் சாப்பாடை டேஸ்ட் பார்க்கட்டும்’ என அன்ஸிதா கூறுகிறார். அந்த அணியில் ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கும் நீ, உனது டீமில் தவறு செய்வது தெரிவில்லையா?” என சாச்சனாவுக்கு கொடுக்காமல் அர்விற்கு கொடுக்க அன்ஸிதா யோசித்ததை சுட்டிக் காட்டுகிறார்.

இப்படி சாச்சனா உணவு பற்றி பேசிய போது பெரிதா கத்திக் கூப்பாடு போட்ட அன்ஸிதா, அர்னவிற்கு உணவு கொடுக்க நினைத்ததை பற்றி ரசிகர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.