ஸ்வாசிகா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கும் பிரபலமான நடிகை ஆவார். இவரது இயற்பெயர் பூஜா விஜய் என்பதாகும். மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி பிரபலமானவர் ஸ்வாசிகா.
2009 ஆம் ஆண்டு வைகை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்வாசிகா. அதைத் தொடர்ந்து கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, அப்புச்சி கிராமம் ஆகிய திரைப்படங்களில் இரண்டாம் நடிகையாக நடித்து பிரபலமானவர் ஸ்வாசிகா. இது மட்டுமில்லாமல் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். ஆனாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு சரியாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்திருப்பார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் ஸ்வாசிகா. அந்த வகையில் சூரி நடித்த மாமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடித்துள்ளார். இந்த படம் அனைவரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஸ்வாசிகா சூர்யா 45 திரைப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், லப்பர் பந்து படத்தில் நடித்தது போலவும் மாமன் திரைப்படத்தில் வந்தது போலவும் என்னுடைய ரோல் சூர்யா நாற்பத்தி ஐந்து படத்தில் இருக்காது. அது வித்தியாசமான ரோல் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். நான் சூட்டிங்கிற்கு போகும்போதே RJ பாலாஜி சார் பழைய கேரெக்டர்களை அப்படியே மறந்து விடுங்கள். புதுசா நடிங்க என்று என்னிடம் கூறினார் என்று பகிர்ந்து இருக்கிறார் ஸ்வாசிகா.